Sunday, August 19, 2018

முக்கண்ணன் அளித்த பன்னிரு கண்ணன் (Aarabhi)



ஆரபி

file1
file2
முக்கண்ணன் அளித்த பன்னிரு கண்ணன், கடைக் கண்ணாலே (நம்) கவலைகள் தீர்க்கும் மன்னன்

மாயக் கண்ணனின் மருகக் கந்தன், காயம் செய்யாது எதிரியையும் ஆட் கொள்ளும் சொந்தன்.

தந்தை தோளமர் ப்ரணவ நாதன்,
வெள்ளை உள்ளத்தமர் கொள்ளை அழகன், இல்லை எனாதருளும்   ஈறாறு கரத்தன், வேலேந்தி நிற்கும் பால குமாரன்.

மயில் மீது வரும் ஞால முதல்வன், மாதிரிவருடன் ஆடும் ஞானச் செல்வன், (ஞான) சம்பந்தனாகி தமிழ் வளர்த்தான், அருணகிரியின் பாடலில் வாழ்வான்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment