சுத்த சாவேரி
நந்தவனத்துறை நடராஜன், பவ
பந்த விமோசன சிவ ராஜன்
ஆருத்ரா அபிஷேகம் கொண்டானே
அன்பர் உள்ளம் கொள்ளை கொண்டானே
திருப்பள்ளி எழுச்சி கேட்டு எழுவான்
திருவெம்பாவையில் லயித்திருப்பான்
மணிவசாகரின் திரு வாசகத்த்திற்கே
உள்ளம் நெகிழ்வான், உறுதியாய் அருள்வான்
சிவகாம சுந்தரி நாயகன் அவனே
அவமாயை நீக்கும் ஆதி பராபரன்
ஐந்து சபைகளில் ஆடிடும் தேவன்
நைந்து பணிந்தால் விரைந்து அருள்வான்
சிவம் சுபம்
audio
No comments:
Post a Comment