Sunday, March 26, 2017

சிதம்பரம் அளித்த வள்ளல் (Neelamani Siva Ranjani)



Neelamani (?)

சிதம்பரம் அளித்த வள்ளல்
(திருச்) சிற்றம்பலவன் அருள் பெற்றுத் தரும் வள்ளல்

திருமுறை சாரமதனை, திருவருட்பா அமுதாய் அளித்த வள்ளல்

தணிகை வேலனை கண்ட வள்ளல்,
தண்ணீர் விட்டு விளக்கெறித்த தவ சீல வள்ளல்,
அகவலாம் அருமறை ஈந்த வள்ளல்
அனைத்துயிருக்கும் அன்பு பொழியும் வள்ளல்

அன்னை சக்தி அருள் கொண்ட வள்ளல்
அரி அர அபேத ராம-லிங்க வள்ளல்
சமரச சன்மார்க்க வள்ளல்
சத்வ குண போத சுத்த சிவ வள்ளல்

பூசத்துப் புண்ணியராம் வள்ளல், (பந்த) பாசமற வழி சமைத்த வள்ளல், (இறை)
திருவடிப் புகழ்ச்சியில் லயித்த வள்ளல்,
திருவருட் ஜோதியுள்  நிலைத்த வள்ளல்

சிவம் சுபம்                        

No comments:

Post a Comment