உ
ஆறுமுக வேலவனே வா வா
ஆடும் மயில் ஏறியே வா வா
பாடும் குரல் கேட்டே வா வா (என்) பவ வினை களைந்திட வா வா
தைப்பூசத் திரு நாள் அல்லவோ
பாலபிஷேகம் உனக்கல்லவோ!
மெய் சிலிர்க்கும் காட்சி அல்லவோ, (என்) பிறவிப் பிணி தீருமல்லவோ
திருப்புகழ் மாலை சூட்டியே, உனக்
கலங்காரம் செய்வேன், கந்தா !
அருட்பா அமுது படைத்தே, உன்
அனுபூதி பெற்று உய்வேன்
இருகரம் கூப்பி தொழுதால்,
பன்னிரு கரம் கொண்டே அருளும்
வள்ளல் பெருமான் அல்லவோ!
உன் வற்றாக் கருணை நான் சொல்லவோ!
அருட் பெரும் ஜோதி அளித்த
தனிப் பெருங் கருணையே வா வா
என் அகயிருள் தன்னை நீக்கி
அதனுள் ஒளிர் வா, இறைவா
சிவம் சுபம்
ஆறுமுக வேலவனே வா வா
ஆடும் மயில் ஏறியே வா வா
பாடும் குரல் கேட்டே வா வா (என்) பவ வினை களைந்திட வா வா
தைப்பூசத் திரு நாள் அல்லவோ
பாலபிஷேகம் உனக்கல்லவோ!
மெய் சிலிர்க்கும் காட்சி அல்லவோ, (என்) பிறவிப் பிணி தீருமல்லவோ
திருப்புகழ் மாலை சூட்டியே, உனக்
கலங்காரம் செய்வேன், கந்தா !
அருட்பா அமுது படைத்தே, உன்
அனுபூதி பெற்று உய்வேன்
இருகரம் கூப்பி தொழுதால்,
பன்னிரு கரம் கொண்டே அருளும்
வள்ளல் பெருமான் அல்லவோ!
உன் வற்றாக் கருணை நான் சொல்லவோ!
அருட் பெரும் ஜோதி அளித்த
தனிப் பெருங் கருணையே வா வா
என் அகயிருள் தன்னை நீக்கி
அதனுள் ஒளிர் வா, இறைவா
சிவம் சுபம்
No comments:
Post a Comment