Tuesday, April 7, 2015

அம்மா என்றழைக்க நாவில் (Madhyamavati)

மத்யமாவதி

அம்மா என்றழைக்க நாவில் அமுதூறுதே! அகம் குழையுதே! ஆனந்தம் பெறுகுதே!

இச்செகத்தில்.அன்னைக்கு ஈடிணை உண்டோ? ஈசனுக்கும் கிட்டா பெறும் பேறிதுவன்றோ?

என்ன தவம் செய்தேனோ "தங்கமே" எனை ஈன்றாயே,  என் சொல்வேன் "மதுரமே" எனை பேணி காத்தாயே, கைமாறென்ன செய்வேன் "(சிவ)சுபமே"  உன் கானக் (ஞானக்) கருணைக்கே,  கழலிணை மறவேன் தாயே மதுரை மீனாளே!

audiolink

No comments:

Post a Comment