பூபாளம்/பௌளி
சிவ குடும்பத்தருள் நிறைந்திருக்க, பவ பயம் நம்மை அணுகாதே
படைத்தவள் நம்மை அன்னை மீனாள், கண்
காணித்து வளர்ப்பவர் அய்யன் சிவனார்
காணித்து வளர்ப்பவர் அய்யன் சிவனார்
தடைகள் தகர்ப்பான் தந்த முகன்
பயமதை போக்குவான் ஐயப்பன்
வெற்றிகள் குவிப்பான் வடிவேலன்
காத்து ரக்ஷிப்பான் தாய் மாமன்
பயமதை போக்குவான் ஐயப்பன்
வெற்றிகள் குவிப்பான் வடிவேலன்
காத்து ரக்ஷிப்பான் தாய் மாமன்
மாமி பொழிவாள் வற்றா நிதி மழை, (அவள்)
மைந்தன் மாற்றுவான் நம் விதியை,
சிவ சோதரியாம் சரஸ்வதி
அளிப்பாள் அழியா ஞான-மதி
மைந்தன் மாற்றுவான் நம் விதியை,
சிவ சோதரியாம் சரஸ்வதி
அளிப்பாள் அழியா ஞான-மதி
ஒருவரைத் தொழுதாலும் போதுமே,
குடும்பமே பொழியும் பேரருளே,
சிவ குடும்பத்தில் ஒன்றிடுவோம்
பவ பயம் வென்று நிலைத்திடுவோம்.
குடும்பமே பொழியும் பேரருளே,
சிவ குடும்பத்தில் ஒன்றிடுவோம்
பவ பயம் வென்று நிலைத்திடுவோம்.
No comments:
Post a Comment