Monday, May 22, 2017

என்னை விட்டு அகலாதேடா ராமா (Revati)

ரேவதி

என்னை விட்டு அகலாதேடா ராமா, என் நெஞ்சை விட்டு விலகாதேடா, ராமா

கல்லுக்கும் உயிரளித்த கருணா மூர்த்தி, வில்லுக்கு பெருமை சேர்த்த வீர ராம மூர்த்தி

அன்னையின் சொல்லுக்கு அடி பணிந்தவா, தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டவா, தாரம் ஒன்றே என்று வாழ்ந்து காட்டியவா, தஞ்சம் என்போருக்கு அஞ்சேல் என்றருள்பவா

சபரியின் கனி உண்டு மோக்ஷ மளித்தவா,  அரக்கனுக்கும் அபரிமித அருள் பொழிந்தவா
குஹனின் அன்பில் குழைந்த தூயவா, குணமிகு அனுமனுள் அமர்ந்த ஆண்டவா

சிவம் சுபம்

SaraNam Ayyappaa (Revati) - Sri Aathma's composition



composer - Sri Aathmanaathan Sir (Amma's Athma)

Raagam Revathy

SaraNam Ayyappaa, Swaamy SaraNam. Ayyappaa

PanthaLa mannaa! en-thanaik kaa vaa,
santhatham unthanai bajippaen Swaamy

(SaraNam)

Kaliyuga varathan nee, Kari-mugan anujan nee, vali-migu vidhiyai-yum nalivura cheivoi nee (SaraNam)

Sudhiyudan viratham kaathidum anbarukku saththiya-maai aruL pozhinthidum vaLLal nee, unnai nambinor keduvathillai, unnai kumbiduvaen koovi azhaithiduvaen Swaamy (SaraNam)

Sivam Subam

N.B.

Once I sang this song in a slightly modified tune - un-knowingly - but Amma very generously blessed "nee paadinathu nannaa irukku,   nee ippadiyae paadu" Today being Panguni Uththiram, I dedicate this song to Amma as well as Swamy. Forgive me for all my mistakes in lyrics or other aspects.

அம்மா அவர்கள் இசையின் இமயம். இருப்பினும் ஒன்றுமறியா ஒருவனையும் பாடச் சொல்லிக் கேட்டு ஆசிர்வதித்தார்கள் என்றால் என்ன உயர் பண்பு, கருணை. அந்த நந்நாள் இன்று நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன. உள்ளம் உவகையில் மிதக்கிறது.

 Sivam Subam. Swamy Saranam.

MS Amma Stuthi



இசைக்கவென்றே அவதரித்"தாய்"
ஈவதற்கென்றே இசைத்"தாய்"
ஷண்முக வடிவத்"தாய்"
சதாசிவனை மணந்"தாய்"
சந்திரசேகரரைக் கவர்ந்"தாய்"
சத்யசாயியை உள் வைத்"தாய்"
கண்டத்தால் கண்டங்களை இணைத்"தாய்".
படியளப்போனுக்கே படியளந்"தாய்".
பாரை வலம் வந்"தாய்".
பக்தியில் திளைத்"தாய்".
சுபம் பொழிந்"தாய்".
இறையுள் கலந்"தாய்".
இசையாய் எம்மிடை வாழும் தாய்.

சிவம் சுபம்.

பால ஸ்வாமி நாதனாய் (Keeravani)


கீரவாணி

பால ஸ்வாமி நாதனாய் அவதரித்தீர்,
சீல மஹா ஸ்வாமியாய் நெடி துயர்ந்தீர்

திருமகள் தவத்தால் புவி வந்தீர்
மலைமகள் காமாக்ஷியாய் அருள் பொழிந்தீர்

வேதமே உருவாய் (அன்று) ஆலடி அமர்ந்தீர்
வேதக் கரு உறைக்க பின் காலடி உதித்தீர்
வேத நெறி தழைக்க காமகோடி மீண்டீர்
எங்கள் குருவே, இறையே, உமக் கிணையே இலையே

எளிமையின் வடிவாய் எம்மிடை நடந்தீர், தூய
துறவற இமயமாய் தவத்தில் லயித்தீர்,
தருமமே லக்ஷ்யமென வாழ்ந்து ஜ்வலிக்கும்
எங்கள் பரமாச்சார்ய பரப்ரஹ்மமே  சரணம்.

சிவம் சுபம்

செந்தழலில் தோன்றிய (Bairavi)

Bairavi

செந்தழலில் தோன்றிய செந்தமிழ் தாயே
செம்மை நலமருளும் மீனாக்ஷி உமையே

ஆலமுண்டோனைக் காத்த அமுதே, அவன் கரம் பிடித்து அகிலம் ஆளும் அழகே

முத்தமிழ் சங்கத் தலைவியே, இப் பிள்ளைத் தமிழையும் ஏற்பவளே,
கலி வெண்பா கொண்ட கயற்கண்ணி, மனக் களிப்புடன் வாழ்வேன் உனை எண்ணி

என்னுள் ஒளிர்பவள் நீ தானம்மா, என் துணை யென்றுமுன் நாதனம்மா,
பவ பயம் போக்கும் பைரவித் தாயே, உன் பத மலர் என் சிரம் வைத்தாள்வாயே.

(அம்மா) மாதம் மும்மாரி பொழிந்திட வேண்டும்,
(மக்கள்) பஞ்சம் பிணியின்றி வாழ்ந்திடவேண்டும்,
உலகெங்கும் உன் நாமம் ஒலித்திட வேண்டும், உன்னருளால் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்

சிவம் சுபம்

என்ன கரிசனம் நம் (Sahaana)

சஹான

என்ன கரிசனம் நம் அன்னைக்கு,
ஆனந்த தரிசனம் தருகிறாள் உலகிற்கு

 (அன்னை) சற்றே விழி மலர்ந்தால் போதும்,
நல் வழி பிறக்கும் அனைத் துலகியிற்கும்

வேதாகம ஸாஸ்த்ர சாரதை அவளே - சங்-கீத நாத ஒலி வடிவினளே, நல்
இச்சை க்ரியை ஞான பிக்ஷை இடுவளே,  மன சஞ்சல மின்றி வாழ அருள்வாளே

ச்ருங்க கிரி வாழ் மலை மகளே,
அலை பாயா மனமருள் திரு மகளே,
திட ஞானமருள் கலை மகளே, நின்
திருவடி தந்தாள் ஸ்ரீ புரத்தாளே.

சிவம் சுபம்

சேஷாத்ரி நாதா, க்ஷேமம் (Bhoopalam)


பூபாளம்

சேஷாத்ரி நாதா, க்ஷேமம் அருளும் குரு நாதா, சேய் எந்தன் குறைகளையும் குணமாய் கொள்ளும் இறையே!

காமாக்ஷி அன்னையின் கருணை வடிவே, கழலிணைப் பணிந்தேன், அருள் கற்பகத் தருவே.....ஸ்ரீ...

ஷண்முக ரமணரை உலகுக் களித்தாயே, ஷண்மத ஜகத் குரு போற்றிய எந்தையே, சபரியின் வடிவாம் காவேரி அன்னையின் சந்ததியில் நிலை கொண்டே சந்ததம் எமை வழி நடத்தும்...

ராஜ பூஜீதரின் குழந்தை மனமதைக் கவர்ந்தாயே,  பவ ரோகமதை நீக்கும் (செம் முருகன்) வெண்பா புனைந்தாயே, அன்பருள்ள ஊஞ்சலூரில் ஆடிடும் தேவா, மெய்யின்பமாம் ஞான பிக்ஷை அளித்தெம்மைக் காத்திடும்...

சிவம் சுபம்

Devi Jaga Janani Chith roopiNi (Poorvi Kalyani)



Poorvi kalyaani

Devi Jaga Janani Chith roopiNi
Devaaadhi devuni RaaNi, Mathura Vaani Ambaaa...

Haalaasya kshethra Naadheswari,
Hari Brahmathi deva visvaasini, Suvaasini, Amba...

Baktha hrudaya vaasini, pari poorna karunaamrutha varshiNi, Poorvi kalyaaNi, puthra powthra vara dhaayini, Sathva guna prasaadini, sadhaa Sundareswara manolaasini, Manonmani, Ambaa....

Sivam Subam

Jaya Saayi Naathaa

OM

Jaya Saayi Naathaa
Jaya Guru Naathaa
Jaya Paranthaamaa
Jaya Paramaesaa

Jaya Saayi Maathaa
Jaya Jagan Maathaa
Jaya Bhaktha Hrudayaa
Jaya Prashaanthi Nilaya

Jai Saai Raam
Sivam Subam

(Raagam Yaman KalyaaNi)

சிவன் வேறு இவர் வேறு அல்ல


audio1
audio2


விருத்தம் - திரு அருட் பா

என்னுயிர் நீ, என்னுயிர்க்கோர் உயிரும் நீ, என் இன்னுயிர்க்குத் துணைவன் நீ, என்னை ஈன்ற அன்னை நீ,  என்னுடைய அப்பன் நீ, என் அரும் பொருள் நீ, என் இதயத் தன்பு நீ, என் நன்னெறி நீ, எனக்குறிய உறவு நீ, என் நற்குரு நீ, எனைக் கலந்த நட்பு நீ, என் தன்னுடைய வாழ்வு நீ, என்னைக் காக்கும் தலைவன் நீ, கண் மூன்று தழைத்த தேவே

- வள்ளல் பெருமான்

சிவன் வேறு இவர் வேறு அல்ல, மஹாதேவனே மஹா பெரியவரானார்

சடை மறைத்து மறை தாங்கி வந்தார், மதியொளியாம் ஸ்ரீ சந்திர சேகரனார்

புலித்தோல் அகற்றி காஷாயம் புனைந்தார், சூலத்தை விடுத்து தண்டம் ஏந்தினார், நடமாடும் தெய்வம் நம்மிடை நடந்தார், ஆலடியாரே காமகோடி அமர்ந்தார்

மௌனமாய் அன்று  அரு மறை ஈந்தவர், திருவாய் மலர்ந்தின்று   திருவருள் பொழிந்தார், அங்கையில் கனிபோல் ஆறாம் வேதம் உறைத்தார், அம்மையப்பனாய் அன்பர் உள்ளம் நிறைந்தார்

அஞ்சும் எட்டும் ஒன்றென்றார், அனைவரும் இறைக் குடும்ப மென்றார், தானே அதுவான தவவேந்தர், நம் பரமாச்சார்யராம் பரமேஸ்வரர்.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

எந்நேரமும் உமது அதிஷ்டானத்திலே (Devagandhari)


தேவகாந்தாரி

எந்நேரமும்  உமது அதிஷ்டானத்திலே இருக்க வேண்டும் ஸ்வாமி, மஹா ஸ்வாமி!

நினைத்தாலே நிம்மதி தரும் காம கோடி பீடத்தில், கருணையே வடிவாய் காட்சி தரும் தெய்வமே! நான்

திசை எங்கணும் ஒலிக்கும் "ஜெய சங்கர" கோஷமும், வேதாகம சாஸ்த்ர சாரமும், சஞ்சலமெலாம் போக்கும் சந்த்ர மௌலீச தரிசனமும் கண்டு, உமை வலம் வந்து பணிந்து....

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

Sri Mahaperiyavaa Astakam



ஸ்ரீ மஹா பெரியவா சரண அட்டகம்

அருளே, அமுதே சரணம் சரணம்
ஆலடி காலடி மறுவுருவே சரணம்
இம்மையில் கண் கண்ட தெய்வமே சரணம்
ஈச்சங்குடி அன்னையின் தவமே சரணம்
l

உயர் காமகோடி இறையே சரணம்
ஊழ்வினை மாற்றும் மா மறையோய் சரணம்
எம்மிடை நடமாடும் தெய்வமே சரணம்
ஏகனே அனேகனே சரணம் சரணம்

ஐந்தையும் எட்டையும் இணைத்தோய் சரணம்
ஒன்றியோர் உள்ளம் உறைவோய் சரணம்
ஓங்காரத் தொளிர் ஜோதியே சரணம்
ஔவையின் அகவலில் லயித்தோய் சரணம்

காமாக்ஷி அன்னையின் கருணையே சரணம்
சந்திர சேகர ஸரஸ்வதி சரணம்.
ஞாலம் போற்றும் ஞானமே சரணம்
டமருகம் சூலம் மறைத்தோய் சரணம்

த்வைதாத்வைத சேதுவே சரணம்
நாதியற்றோர்க்கும் நற்கதியே சரணம்
பிடி அரிசி அன்னபூரணமே சரணம்
மண்பட நடந்த பாதமே சரணம்

யாக யக்ய போஷகரே சரணம்
ரம்ய தெய்வக் குரலோய் சரணம்
லக்ஷியம் வழுவா லக்ஷணமே சரணம்
வரத "நாராயண ஸ்ம்ருதி"யே சரணம்

அமிழ்தினும் இனிய மொழியோய் சரணம்
அதிஷ்டானத்துறை அற்புதா சரணம், (எம்)
அன்னை தந்தை குரு தெய்வமே சரணம்
ஆச்சார்ய ஆதி சிவமே சரணம்

ஜெய ஜெய சங்கரா சரணம் சரணம்
ஹர ஹர சங்கரா சரணம் சரணம்
சரணம் சரணம் சந்திர சேகரா
தரணும் தரணும் பதகமலமே .

தரணும் தரணும் (உம்) பத கமலமே.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

பிறப்பிறப்பில்லா பெம்மானே (Gowla)



Gowla

பிறப்பிறப்பில்லா பெம்மானே நமக்காய் புவியில் அவதரித்தாரே

ஆதி யந்தம் இல்லா அருட் பெருஞ் ஜோதியே, ஆதி சங்கரராய் அவனி வந்தாரே

தந்தை தாய் இல்லா எந்தையே,
சிவ குரு ஆர்யாம்பாள் மகவானாரே,
ஆலடி நிழல்  விட்டு காலடி  வந்தாரே,
அருமறை யளித்த ஐயனே அத்வைத சாரம் உறைத்தாரே

ஷண்முகனை ஈன்ற தேவனே ஷண்மத ஸ்தாபனம் செய்தாரே
தன்னை தொழுதிடும் தேவர்களைத்,
தானே ஸ்தோத்திரம் செய்தாரே,
தானே அதுவாகும் வழி நெறியை உலகிற் குபதேசம் செய்தாரே

நம் தாயுமான சங்கரன்  தன்   தாய்க்கும் பஞ்சகம் புனைந்தாரே, நான் மடங்களை நிருவி, தானே காமகோடி  அமர்ந்தாரே

முற்பது வயதில் கயிலை
மீண்டவர்,
முழு நூறு வாழ நினைந்தாரே,
விழுப்புரத்தில் மீண்டும் தோன்றிய பரம்பொருள்
சந்திர சேகர ஸரஸ்வதி யாய்
நம்மிடை,  நம்முள்ளே வாழ்கின்றாரே

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர
ஹர சந்த்ர சேகர ஜெய சந்த்ர சேகர

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

ஸ்ரீ ராம அனுஜன்



ஸ்ரீ ராம அனுஜன், ராமனுடன் சிவனைத் தொழுத அனுஜன், ராமானுஜன், ஸ்ரீ ராமானுஜன்

அரவணையாய் அரங்கனைத் தாங்குவோனே, அண்ணலை அரணாய் காத்த இளையோன்
ஆனானே

கண்ணனை அனுஜனாய்க் கொண்டானே, அந்தக்
கலப்பை ஏந்திய பலராமன்.
கலியில் வைணவம் தழைக்கத் தோன்றிய -  த்யாக  மஹனீயன்
விசிஷ்டாத்வைத வீர முனிவன்

சிவம் சுபம்

வடிவுடை மாணிக்கமே (Mohanam)



மோஹனம்

வடிவுடை மாணிக்கமே
த்யாகன் இடம்  உறை மாணிக்கமே

ஆதி சங்கரன் கண்ட மாணிக்கமே
அதி "சௌந்தர்ய" லாவண்ய மாணிக்கமே

ஸத்குரு ஸாஹித்ய மாணிக்கமே
வள்ளல் ஸதம் சூடி மகிழும் மாணிக்கமே, (திரு)
ஒற்றியூர் வாழும் மாணிக்கமே, சத் சித் ஆனந்த சிவையாம் மாணிக்கமே

வட்டப் பாறை உறை மாணிக்கமே
கம்பன் காதை செவி மடுத்த மாணிக்கமே,
பட்டினத்தார் தொழும் ஈசனின்
பாகம் பிரியா மாணிக்கமே

பவ வினை களையும் மாணிக்கமே,
(என்) பக்க துணை நீயே மாணிக்கமே,
வங்கக் கரை உறை மாணிக்கமே,
பங்கம் வராதெமைக் காக்கும் மாணிக்கமே

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

ஊர்காடு அமர்ந்த என் குல தெய்வமே



ஊர்காடு அமர்ந்த என் குல தெய்வமே, உன் பாதம் சரணம் நரசிங்கமே

(உனை) தாமிரபரணி  வலம் வர
காமித பலமதை எமக்கருள....

பாலனைக் காக்க வந்தவனே,
சீலமுள்ளோர் உள்ள அரங்கனே,
கல்பக வ்ருக்ஷ கருணா மூர்த்தே l
"ஸ்வாதீ"னமாய் நாங்கள் செழித்து வாழ.....

மாண்டவ்ய ரிஷி தொழும் மாதவனே,
மனம் உறைபவளை மடி வைத்தோனே,
கஜேந்த்ர வரத கருட வாஹனா,
அஞ்ஜனை செல்வனை அருகில் வைத்தே.....

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

Chithra Thiruvizha Special



சித்திரைத் திருவிழா  ஸ்பெஷல் 1

"மதுரைத் தல மாண்பு"

திரு ஆலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர், செல்வம் ஓங்கும்.

திரு ஆலவாய் என்று நினைத்துவரே பொருள் அடைவர்.

தேவ தேவன் திரு ஆலவாய் அதனைக் கண்டவரே
இன்ப நலம் சேர்வர்  -

என்றும்
திரு ஆலவாயிடத்து வதிந்தவரே
பரவீடு சேர்வர் அன்றே.

-- ஸ்ரீ பரஞ்ஜோதி முனிவர்

சிவம் சுபம்

audio1
audio2




சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் - 2

மதுரை மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழ்

பெருந் தேனிறைக்கும் நறை கூந்தற் பிடியே வருக

முழு ஞான பெருக்கே வருக

பிறை மௌலிப் பெம்மான் முக்கட் சுடர்க்கிடு
நல் விருந்தே வருக

மும்முதற்க்கும் வித்தே வருக
வித்தின்றி விளைந்த பரமானந்த்தின்
விளைவே வருக

பழ மறையின் குறுந்தே வருக
அருள் பழுத்த கொம்பே வருக

திருக்கடைக்கண் கொழித்த கருணைப்
பெரு வெள்ளம் குடைவார் பிறவிப்  பெரும் பிணிக்கோர் மருந்தே வருக

பசுங் குதலை மழலைக் கிளியே வருகவே
மலையத்துவசன் பெற்ற பெரு வாழ்வே
வருக வருகவே

- ஸ்ரீ குமரகுருபரர்

சிவம் சுபம்

சித்திரைத் திருவிழா  ஸ்பெஷல்  - 3

 திருவாசகத் தேனமுதம்

சதுரை மறந்து அறிமால் கொள்வர்
சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்துக் குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி கேடு கண்டீர்,  மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே

(சதுரை - ஆற்றலை; அறிமால் - ஞான மையல்;  குடிகேடு - பிறவிப் பிணி ஒழியும்;
கழுக்கடை - ஈட்டி திரிசூலம்; ஓட மறித்திடுமே  - ஒட்டி மீண்டும் வராது தடுக்கும்)

காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்,
கருது அரிய ஞாலம் உண்டானோடு நான்முகன்
வானவர் நண் அரிய ஆலம் உண்டான் எங்கள்
பாண்டிப் பிரான் தன அடியவர்க்கு மூலப்
பண்டாரம் வழங்குகின்றான், வந்து முந்துமினே

(காலம் உண்டாகவே - ஆயுள் கைவசம் உள்ளபோதே;
ஞாலம் உண்டானோடு - உலகளந்த மாலொடு
நண் அறிய - அணுக முடியாத; ஆலம்  - விஷம்/விடம்
மூலப் பண்டாரம் - பேரின்பச் செல்வம், வீடு)

கூற்றை வென்று அங்கு ஐவர் கோக்களையும் வென்று, இருந்து அழகால் வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஓர் மீனவன் பால் ஏற்று வந்து ஆர் உயிர் ஆண்ட
திறல் ஒற்றைச் சேவகனே, தேற்றம் இலாதவர்
சேவடி சிக்கெனச்  சேர்மின்களே

(கூற்றை - யமனை/காலனை/விதியை; ஐவர் கோக்களையும் - புலன்களாகிய
ஐந்து அரசர்களையும்; மீனவன் - பாண்டி மன்னவன்; ஏற்று - இரந்து;
திறல் - ஆற்றல்; ஒற்றைச் சேவகன் - ஒரே/தனிப்பட்ட வீரன், சிவபெருமான்

--- அருள் திரு மாணிக்கவாசகப் பெருமான்

சிவம் சுபம்



வில்லழகா, உன் வில் அழகா, நீ அழகா

வில்லழகா, உன் வில் அழகா, நீ அழகா

சொல்லழகா!  "இன்று போய் நாளை வா" என்ற (உன்) சொல் அழகா, தருமத்தைக் காக்கும் உன் வில் அழகா?

செயலழகா, மறைந்திருந்து அம்பெய்த செயல் அழகா,
இல்லை அதனால் விளைந்த நற்பயன் அழகா

வில்லழகா, உன் வில்
அழகா, நீ அழகா.....
அனைத்தும் அழகே, அருளே

சிவம் சுபம்


தூணைத் தாயாய் கொண்டவா போற்றி



தூணைத் தாயாய் கொண்டவா  போற்றி 
தூயவன் வேண்ட தோன்றினை  போற்றி

ஸ்வாதியில் உதித்த முத்தே போற்றி
ப்ரதோஷக் காலப் பேரருளே போற்றி

அரக்கனை(யும் ) மடி வைத்த ஆண்டவா போற்றி, அவன் சந்ததி காத்த சத்வமே போற்றி
அஹோபிலத் துறை அரியே போற்றி, (அரனாம்)
சரபனுள் கலந்த நரஹரியே போற்றி

பிஞ்சுக் குழந்தை மனத்தாய் போற்றி
செஞ்சு லட்சுமி நாதா போற்றி
கானகத்தில் வாழ் நவமே போற்றி
பானகத்திற்கிரங்கும் பரமே  போற்றி

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்


Swaagatham Narasimhaa!



Welcome Narasimhaa!

Swaagatham Narasimhaa!
Su swaagatham Narasimhaa!
Prathosha Narasimhaa!
Prahlaatha Narasimhaa!

Swaathi Narasimhaa!
Sthamba Narasimhaa!
Jwaalaa Narasimhaa!
(parama) Paavana Narasimhaa!

Kroda Narasimhaa!
Kaarancha Narasimhaa!
Maalola Narasimhaa!
Yoga Narasimhaa!

Bhaargava Narasimhaa!
Chathravata Narasimhaa!
Nava Nava Simhaa !
Namo Sri Lakshmi Narasimhaa!

Sivam Subam

Simha mughe

OM

Simha mughe
Rowthra roopiNyaam
Abaya hasthaangitha
KaruNaa moorthey
Sarva vyaabitham
Loka Rakahagam
paapa vimochana
duritha nuvaaraNam
Lakshmi kataaksham
Sarvaa-abhishtam
anaekam dehi
Sri Lakshmi Nrusimhaa!

Sivam Subam                        

கை தொழுதேன் உன்னை



விருத்தம்
ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரம்

ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடும் இவ்வாணுதலே

கை தொழுதேன் உன்னை,
கைவிடாதே என்னை,  கடிகாசலம் உறை நரசிங்கா

தூணில் தோன்றிய தூயவனே
தூயவர் உள்ளம் உறை மாயவனே

பார்வதி சோதரனே பரந்தாமா, நான் படும் அவதி நீ அறியாயோ,
அனுமனுக்கருளிய நரஹரியே,
இந்த அபலைக் கருளவா முரஹரியே

சிவம் சுபம்

குருவே வாரும்



குருவே வாரும், இது குரு வாரம்.
ஸத்குருவே வாரும், ஸத்கதி தாரும்.

தமியேனோ ஞான சூனியன்,
தாமோ ஞான சூரியன்,
அடியேன் கரை கடந்திட வேண்டும்
அதற்கருள் அய்யன் புரிந்திட வேண்டும்

த்வைதாத்வைதம் நான் அறியேன்
வேதம் ஆகமம் நான் அறியேன்
அறிவேன் ஒன்றே உம் பாதம்,
அய்யன் தந்தால் அதுவே பரம பதம்.... எனக்கதுவே பரம பதம்.

குருவரும் வாரம் குருவாரம்
திருவருள் பொழியும் குருவாரம்
வாரம் முழுதும் குரு வாரம்
சாகா வரம் தரும் ஸத்-குரு வாரம்

சிவம் சுபம்

Swaaminaatha Guruguham



Swaaminaatha Guruguham
Mahaa-swaami naatha Sankaram
Gnanasambandha Saraswathim
Mahaalakshmi Sugumaaram
Mandhahaasa vathanam, Shaantham,
VedharoopiNam, Aaagama rakshaNam
Dharma swaasinam, Swadharma paalanam,
Kaashaaya vasthra dhaarinam,
Kaanchi nilayam,
Kaamakoteeswaram,
Kaamaakshi Hrudhayam,
Abaya hasthaangitha KaruNaa samudram,
Sarvaantharyaaminam,
Sarva paapa kshayagaram,
Sarvaabheshtam anaekam dehi,
Sarva Sammatha-Achaarya
Sri Sri Sri Chandrasekarendra
Sarva Jagath Guroh!

ஸ்வாமிநாத குருகுஹம்
மஹாஸ்வாமி  நாத சங்கரம்
ஞான சம்பந்த ஸரஸ்வதிம்
மஹா லக்ஷ்மி ஸுகுமாரம்
மந்தஹாஸ வதனம், சாந்தம்
வேத ரூபிணம், ஆகம ரக்ஷணம்
தர்ம ஸ்வாசினம், ஸ்வ-தர்ம பாலனம், காஷாய வஸ்த்ர தாரிணம்,
காஞ்சி நிலையம்
காமகோடீஸ்வரம்
காமாக்ஷி ஹ்ருதயம்
அபய ஹஸ்தாங்கித கருணாஸமுத்ரம்
ஸர்வாந்தர்யாமினம்
ஸர்வ  பாப க்ஷயகரம்
ஸர்வாபிஷ்டம்
அநேகம் தேஹி

ஸர்வ ஸம்மதாச்சார்ய
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர
ஸர்வ ஜெகத்குரோ!

பதினாறும் பெற்று பெறு வாழ்வு (Thillang)


 திலங்

பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழலாம், பதியின் கரம் பிடித்து, மதுரை யம்பதி அமர்ந்து, பதி நாலு லோகமும் அளும் சதியாள்,
மங்கையற்கரசி, மனோன்மணி, கயற்கண்ணி கழலிணை தொழுதக்கால் (பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழலாம்).

சோம சுந்தரா - சொக்க நாதா - ஆடலில் வல்லானே - அருள் புரி ஈசனே

கால்மாறி ஆடிடும் வெள்ளி யம்பலேசனே, கல்யாண சுந்தரா, கயற்கண்ணி நாதா

சங்கத் தமிழ் இறைவனே, சந்தத் தமிழ் புலவனே, திரு நீற்று மேனியனே, திருமணக் கோலனே, ஆலவாய் அழகனே, ஆதி யந்தம் இல்லானே,n கல்யானைக்கும் கரும்பு ஊட்டிய வள்ளலே

சிவம் சுபம்

திருவடிப் புகழ்ச்சியில் லயித்திருப் போம்

திருவடிப் புகழ்ச்சி

திருவடிப் புகழ்ச்சியில் லயித்திருப் போம். இறை திருவடிப் புகழ்ச்சியில் லயித்திருப்போம்.

மனிதனாய் பிறந்து,
மனிதனைப் புகழ்ந்து, மரணித்து மீண்டும் பிறவாமல்.......

வள்ளலின் புகழ்ச்சி வாணனின் திருவடித் தாமரைக்கே, தேசிக தேவரின் ஆயிரம் கொண்டது அரங்கனின் அற்புத பாதமே, பாம்பனாரின் "தௌத்தியம்" புகழ நெகிழ்ந்தது (ஆறு) படைவீட்டானின் பாதமே, (பட்டத்ரியின்) சப்ததி சூடி மகிழ்ந்தது (பரா) சக்தியின் பதும பாதமே

திருவடியே தரும் திருவருளே, இறை திருவடியே தரும் நிம்மதியே, சூடிடுவோம் அதை சிரமதிலே, நம் சிரமதிலே, நிலைத்திருப் போம் அதன் நிழலினிலே, திருவடி நிழலினிலே.... இறை திருவடி நிழலினிலே.

சிவம் சுபம்

ஊஞ்சலாடினான் அய்யன் (Anandha Bhairavi)

ஆனந்த பைரவி

ஊஞ்சலாடினான் அய்யன் ஊஞ்சலாடினான்,  லக்ஷ்மீ நரசிம்ஹன்  ஊஞ்ச லாடினான்

அஹோபில வாசனவன் ஊஞ்சலாடினான்,  அன்பர் உள்ளம் களிக்க அய்யன்  ஊஞ்ச லாடினான்

ப்ரஹ்லாத வரதனவன் ஊஞ்சலாடினான், ப்ரஹ்மாதி தேவர் தொழ ஊஞ்சலாடினான்,
ஆண்டாளின் தமிழ் கேட்டு ஊஞ்சலாடினான், ஆழ்வாரர்கள் உளம் நெகிழ ஊஞ்சலாடினான்

சிவம் சுபம்

Sri Lakshmi Narasimha Potri - 108



ஓம் நமோ வக்ரதுண்டாய
ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கன் 108 போற்றி


தூணைத் தாயாய்க் கொண்டோய் போற்றி
தூயவனைக் காக்க உதித்தோய் போற்றி
சிம்ஹ முகச் செம்மலே போற்றி
சிறு குழந்தை மனத்தனே போற்றி
சிவந்த உக்ர ஜ்வாலனே போற்றி

புருஷர்களில் உத்தமனே போற்றி
மஹா பராக்ரம தீரனே போற்றி
மஹா விஷ்ணுவே போற்றி
ஜ்வாலா முகனே போற்றி
பிடரிகள் சீலிர்ப்பாய் போற்றி

ஸ்வாதி நட்சத்திரனே போற்றி
ஸ்வாதீனமாய் வாழ அருள்வோய் போற்றி
சதுர்த்தியில் வந்தோனே போற்றி
ப்ரதோஷக் காலனே போற்றி
ப்ரஹ்மாண்ட வடிவனே போற்றி

முக்கண்ணனே போற்றி
மும்மலம் களைவாய் போற்றி
மூவுலகளந்த பாதனே போற்றி
முன்னின்றருள்வோய் போற்றி
முத்தி வரம் அளிப்போய் போற்றி

அரக்கனை மடிவைத்தாய் போற்றி
அரண்மனை வாயில் அமர்ந்தோய் போற்றி
அகங்காரம் கிள்ளிக் களைந்தோய் போற்றி
அன்பனை அணைத்தோய் போற்றி
அவன் சந்ததி காத்தோய் போற்றி

ஆரண்யத் தலைந்தோய் போற்றி
அஹோபிலத் தய்யனே போற்றி
ப்ரஹ்லாத வரதா போற்றி
ப்ரளய பயங்கரா போற்றி
பாவன மூர்த்தியே போற்றி

வேடுவர் போற்றும் தேவா போற்றி
வேடுவப் பெண்ணை மணந்தாய் போற்றி
வேடுவ செஞ்சு நாதா போற்றி
வேண்டத் தக்கது அறிவோய் போற்றி
வேண்டுமுன் முழுதும்அருள்வாய் போற்றி

க்ரோட சிம்ம மூர்த்தியே போற்றி
க்ரோதம் களைவோய் போற்றி
காரஞ்ச மூர்த்தியே போற்றி
கடிகைத் தவ வடிவே போற்றி
த்யானத் தவ யோகனே போற்றி

அஞ்சனை செல்வனுக் கருளினை போற்றி
பஞ்சம் பசி பிணி தீர்ப்பாய் போற்றி
பய நாசனனே போற்றி
பந்த மோசனனே போற்றி
பக்க துணை யாவாய் போற்றி

பரசுராமன் துதி கொண்டாய் போற்றி
பார்க்கவ நரசிம்மனேபோற்றி
சத்ர வட சிம்மனே போற்றி
சக்கரத் தமர்வோய் போற்றி
சங்கடம் தீர்ப்போய் போற்றி

நரஹரி தேவனே போற்றி
நவ நவ சிம்மனே போற்றி
நவசக்தி சோதரனே போற்றி
பவவினை அறுப்போய் போற்றி
சபமருள் லக்ஷ்மீ நரசிங்கனே போற்றி

கார்த்திகையில் கண் மலர்வோய் போற்றி
நேர்த்தியாய் காட்சி தருவாய் போற்றி
சங்கம் சக்கரம் ஏந்துவோய் போற்றி
பங்கம் வராது காப்போய் போற்றி
ப்ரஹ்லாத வரதனே போற்றி

மாதேவன் துதிகொண்டாய் போற்றி
மந்த்ர ராஜ பதமே போற்றி
ஆதி சங்கர கராவலம்பனே போற்றி
உடையவர் உள்ளத் தரங்கனே போற்றி
உத்தம தேசிகரின்  வேதாந்தமே போற்றி

ஸ்ரீ ராகவன் துதி கொண்டாய் போற்றி
ஸ்ரீனிவாசனுக்கு முன்னவனே போற்றி
ஸ்ரீதேவி மருவும் மாலோலனே போற்றி
வராஹ நரசிம்ஹனே போற்றி
வரமழை பொழி வரதனே போற்றி

கெடிலக்கரை அமர்ந்தோய் போற்றி
பரிக்கல் வாழ் பகவனே போற்றி
மரிக்காது வாழ அருள்வோய் போற்றி
கொள்ளிடக் கரை அமர்ந்தோய் போற்றி
காட்டழகிய சிங்கனே போற்றி

கம்பத் தமர்ந்த கருணையே போற்றி
கம்பன் காதை கேட்டோய் போற்றி
வம்பு சூது மாய்ப்போய் போற்றி
அரவணை நிழல் அமர்வோய் போற்றி
அன்பர் உள்ளத் தரங்கனே போற்றி

அனந்த புரி யோகனே போற்றி
ஆனந்த வாரிதியே போற்றி
பட்டத்ரி கண்ட சிங்கனே போற்றி
பாவன நாராயணியனே போற்றி
பவரோக நிவாரணனே போற்றி

பூவரசங் குப்பனே போற்றி
அந்திலி வாழ் மெய்யனே போற்றி
அல்லிக் கேணி முன்னவனே போற்றி
அண்ணல் விவேகானந்தர் மடல் ஏற்றவனே போற்றி
அருணகிரியின் தமிழுண்ட அழகா போற்றி

பரணி வலம் வரும் சிங்கா போற்றி
தரணி புகழ் நெல்லை ஊர்க்காடா போற்றி
மாண்டவ்ய ரிஷி தொழுத மாதவா போற்றி
மடைதிறந்த வெள்ளமாய் அருள் கற்பக வ்ருக்ஷா போற்றி
தடை தகர்த்தருள் தாதா போற்றி

ஐயாற்று அய்யரின் அகம் கவர்ந்தாய் போற்றி
ப்ரஹ்லாத பக்தி விஜயமே போற்றி
ஸ்வாதித் திருநாள் நாயகனே போற்றி
முத்துஸ்வாமியின் இசை மணியே போற்றி
ராமதாசரின் தமிழ் ரசிகனே போற்றி

சரப சிவனுடன் கலந்த சிம்மமே போற்றி
அரியும் அரனும் ஒன்றென்றாய் போற்றி
அழைத்தக் கணமே வரும் அருளே போற்றி
ஆழ்வார் பாசுரம் பாடி அழைப்போம் போற்றி
ஆண்டாளின் துதி சூட்டி மகிழ்வோம் போற்றி

ஆடி ஆடி அகம் கரைவோம் போற்றி
பானகம் படைத்துப் பாடி பாடி மகிழ்வோம் போற்றி -  எக்கணமும் "நரசிங்கா" வென்று உனை நாடி நாடி சரணடைவோம் போற்றி போற்றி

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

Sarva Deva Sthuthi (Raaga Maalika -Kaanada-Hamsaanandhi-Sindhu Bairavi-sri-Suruti)

Sarva Deva Sthuthi
(Raaga Maalika)

Kaanada

Aanai muganae Aaru muganae, Ammaiyae Appanae aruLveerae anbudanae

Hamsaanandhi

Kaarmugil vaNNanae Kamala-thiru Maathae
Naamuganae Naa-magalae
nalamellaam aruLveerae

Sindhu Bairavi

Harihara Sudhanae ayyanae SaraNam, Hari Raama sevaganae Anumanae SaraNam, Nava-graha Naayagarae SaraNam SaraNam, nambi thozhu-thomae nanmaiyae seiveerae

Sri

Sankara Guruvae Chandira sekararae, Sri Raagavendirarae Ksheerdi Saai-yae (Sri Sathya Saaiyae), Sangeetha (mum) moorthigalae Saathu Janangalae Sakala Sowbaagya kalai gnaanam aruLveerae

Suruti

Maathaa Pithaa Guru Deivamae SaraNam, malaradi thozhu-thomae, manam magizhnth-aruLveerae

Sivam Subam

அழகோ அழகு பேரழகு (Vasanth Behag)

வசந்த் பெஹாக்

அழகோ அழகு பேரழகு, அன்னையின் கூடல் பேரழகு

அமுதோ அமுது வான் அமுது
கயற்கண்ணியின் பார்வை பேரமுது

ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம்
அன்னையின் தரிசனம் பேரானந்தம்,
மங்கலம் மங்கலம் மங்கலமே,
அவள் மஞ்சள் குங்குமம் அணிவோர்க்கு.

விருந்தோ விருந்து அருள் விருந்து,
அவள் திருவீதி உலா அருள் விருந்து.
பணிவோ மடைவோம் (அவள்) சரணமே, இனி (நமக்கு) இல்லை இல்லை மரணமே.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்