ஆஹிர் பைரவ்
அனலில் தோன்றிய அருட் புனல் ஒன்னு ஆட்சி புரியுது மதுரயில
கயில கிளி வச்ச கயற் கண்ணி, அவ மரகத மேனி மனோண்மணி,
கயில மலையானை வரவழைச்சு, அவன் கைபிடிச்சாழுது மூவுலக,
சிவ குடும்பமே வாழும் பூமி, யம பயம் இல்லா புண்ய பூமி
ஆயிரம் கோயிலு இருந்தாலும், அழகுக் கோயிலு மீனாட்சிக்கே, நாளொறு திருவிழா, பொழுதொறு வைபவம், நித்ய கல்யாணம், பச்ச தோரணம்,
சிவ சக்தி ஆடல் புரிஞ்ச ஊரு, திருவீதி மண்ணே திருநீறு, மாமன் அழகனும் வாழும் தலம், (பூலோக) கைலாய வைகுண்டம் இது தானே
audiolink


No comments:
Post a Comment