Tuesday, April 7, 2015

படைப்பவள் நம்மை (Vasantha)

வசந்தா

படைப்பவள் நம்மை அங்கயற்கண்ணி, (ஞானப்)
பாலூட்டி வளர்ப்பவள் த்ரிபுரசுந்தரி

பசிப் பிணி தீர்ப்பவள் அன்னபூரணி, நல் வழி காட்டுவாள்                    தர்மசம்வர்த்தினி

ஞானமளிப்பாள் காந்திமதி, தவநெறி கூட்டுவாள் காமாக்ஷி, பொலி-வேற்றிடுவாள் வடிவுடை நாயகி,  (மனை) மங்கலம் காப்பாள் கற்பக நாயகி

உடல் நலம் பேணுவாள் தையல்நாயகி, மனநலம் தருவாள் மனோண்மணி, சந்ததி காப்பாள் கரு-கருகா நாயகி, தன்னையயே தந்திடுவாள் விசாலாக்ஷி

audiolink

No comments:

Post a Comment