Sunday, November 15, 2020

நாமம் நவின்றாலே போதும், நரசிம்மன் தோன்றிடுவான்


நாமம் நவின்றாலே போதும், நரசிம்மன் தோன்றிடுவான்
பவ பயம் போக்கிடுவான்
பக்க துணை யாயிடுவான் - 

கம்பத்திலும் இருப்பான்
கடுகுள்ளும் ஒளிர்வான் 
நம்பிப் பணிவோரின்
மனம் வெம்பாமல்
காத்திடுவான்

பகையை முடித்திடுவான்
உவகை அளித்திடுவான்
கள்ளம் தவிர்த்திடுவான்
உள்ளம் கவர்ந்திடுவான்

பாலனுக்காய் வந்தான்,
பின் அனுமனும் கண்டு கொண்டான்
நாமும் அழைத்திடுவோம் 
நாதனுள் கலந்திணைவோம்.

நரசிங்கா நரசிங்கா
நரசிங்கா நரசிங்கா

சிவம் சுபம்

My Humble Tribute to Sri Muthuswami Dikshitharதினசரி ப்ரார்த்தனை 96


My Humble Tribute to Sri Muthuswami Dikshithar

தினசரி ப்ரார்த்தனை 96

 *ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆராதனம்* 
 *Sri Muththu Swami Dikshithar Aaraadhanam* 

ஸ்ரீ ராமஸ்வாமி தனயம்
ஸ்ரீ வித்யா உபாஸகம்
கங்கா தேவி ப்ரஸாதித வீணா கரம்
மந்த்ர தந்த்ர யந்த்ராராதன நிபுணம்
பாவராக தாள லய விநோதம்
ஸ்ரீ குருகுஹ முத்ரா ஸுநாதம்,  (ஸ்ரீ)
மீனாக்ஷி ஹ்ருதய நிரந்தர நிவாஸம்
ஸ்ரீ முத்துஸ்வாமீம் சிந்தயேஹம் ஸதா 

Sri Ramaswami Thanayam
Sri Vidhyaa Upaasagam
Gangaa devi prasaadhitha VeeNaa karam
Manthra Thanthra Yanthra-araadhanaa nipuNam
Bhaava,eaaga thaaLa laya vinodham
Sri Guruguha Mudraa Sunaadham, (Sri)
Meenaakshi Hrudaya niranthara nivaasam
Sri Muththu Swaamim chinthayeham sadhaa

ராமஸ்வாமி அளித்த முத்துஸ்வாமி - (பாவ) 
ராக தாள லய "குருகுஹ" ஸ்வாமி 
திருத்தணிகையன் அருள் பெற்ற வித்து  
திருவாரூர் மும்மணியுள்  ஒரு முத்து  1

சகல வேதாகம சாஸ்த்ர  மணி 
சர்வ மந்த்ர தந்த்ர சிரோன்மணி 
ஸ்ரீ வித்யா உபாசனா ஸ்ரேஷ்ட மணி 
சிறந்த வைணீக சிகாமணி  2

நாமத்தை நாதத்துள் அமுதெனக் கலந்து 
வேத மந்த்ர சாரத்தில் தோய்த்தெடுத்து
மேள சக்ர ராகங்களில் மெருகூட்டி 
காலத்தை வென்று வாழும் கீத  மணி  3

(உம்) நவா வர்ணத்தில் கமலை நெகிழ்வாள்
நவகோள் மலர்கள் நன்மை பயக்கும் 
"மீனாக்ஷி மேமுதம் தேஹி" என்றால்  
"இதோ தந்தேன்" என்று அன்னை அருள்வாள்  4 

(உம்) துதி பெறா தெய்வம் இல்லை அய்யா
உம் துதி கேட்டு நெகிழா உயிரில்லை  அய்யா
தீபத் திருநாளில் ஜோதியில் கலந்து 
எட்டயாபுரத் தொளிர் நந்தா விளக்கே !
எண் திக்கும் ஒலிக்கும்  நாதப் பெருக்கே ! 5

சிவம் சுபம்