Tuesday, April 4, 2017

Thiruppugazh

Thirupugazh 3

https://drive.google.com/file/d/0Bz6Tw9UDCHXtOTJVc1B0eGwxVUU/view?usp=sharing
https://drive.google.com/file/d/0Bz6Tw9UDCHXtVUk0aklwcU5aSFU/view?usp=sharing
https://drive.google.com/file/d/0Bz6Tw9UDCHXtN1laNFk2UFg1dkU/view?usp=sharing
https://drive.google.com/file/d/0Bz6Tw9UDCHXtcXp5amZkc3daQ28/view?usp=sharing



Baththiyaal yaan-unaip palakaalum
patriyae maa thirup....     pugazh paadi
muththanaa maaranaip peru vazhvin
muththiyae saervathar. .. karuLvaayae
uththamaa thaana sar-   guNa-neyaa
oppilaa maa-maNi.....Giri vaasaa
viththagaa gnana saththini paathaa
Vetri velaayuthap PerumaaLae

பத்தியால் யானுனைப் ...... பலகாலும் பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
 முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே

4.  Kanthar Abuboothi

En thhayum enakaruL thanthaiyum nee
chinthaakula-maana-vai theerth-enai yaaL Kanthaa, Kathir-velavanae, UmaiyaaL mainthaa Kumaraa Marai naayaganae

 4. கந்தர் அனுபூதி

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே

5. Thirupugazh

mathiyaal viththaganaagi manathaal uththamanaagip

pathivaagi-ch Siva gyaana para-yogath tharuLvaayae

nithiyae niththiyamae en ninauvae naR poruLaayoi

gathiyae sor paravaeLae Karuvoor-ir PerumaaLae

மதியால் வித்தகனாகி மனத்தால் உத்தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத்  தருள்வாயே
நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய்
கதியே சொற் பரவேளே கருவூரிற் பெருமாளே.

6. Kanthar anuboothi

uruvaai aruvaai uLathaai ilathaai

maruvaai malaraai maNiyaai oLiyaaik

karuvaai uyiraaik gathiyaai vidhiyaaik

Guruvaai varuvaai aruLvaai Guhanae

6  கந்தர் அனுபூதி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

சிவம் சுபம்
Sivam Subam


மனமெனும் கோயிலில் (Kaanada)

Kaanada

மனமெனும் கோயிலில் உனையே வைத்தேன், மதியணி சேகரனே! மஹேஸ்வரனே!

அன்பு விழி நீர் சொரிந்து அபிஷேகம் செய்வேன், அருந்தமிழ் மாலை சூட்டி அலங்காரம் செய்வேன்,

(நீ) எனக்களித்த உணவை உனக்கே படைப்பேன், என்னை நான் சுற்றி உன்னை வலம் வருவேன், உன்னைக் காண்பேன், என்னை இழப்பேன், பிறவா வரம் பெற்று உன்னுள் நிலைப்பேன்

சிவம் சுபம்

audio

Sri Anjaneya Swami Stuthi (சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்)

விருத்தம்

"காற்றின்" மகவானான், "வான"ளாவிப் பறந்தான்,
அகன்ற "கடல்" கடந்தான், "புவி" மகள் உயிர் காத்தான்,
அதர்மத்தை "எரி"த்தான், கண்டேன் அன்னையை என்று அண்ணல் அடி பணிந்த பஞ்ச பூத பாவனன் பதம் பணிந்து உய்வோம்
-------
சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்,
சொல்லின் செல்வனின் திறல் விளங்கு காண்டம்

ஜெகம் புகழும் புண்ணியனின் வீர தீர காண்டம், ஜெகன்மாதா சீதை மனம் நெகிழ்ந்த காண்டம்

ராம நாம ஜெபத்தின் மகிமை நிறை காண்டம்,
ராமனே நெகிழ்ந்து நின்ற ரசமிகு காண்டம்,
படிப்பவர் கேட்பவர் பதினாறும் பெற்று,
நிறை வாழ்வு வாழ அருளும் காண்டம்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio1
audio2

Veera Raaghava Panchakham (By Vallalar Swami)




வடலூர் வள்ளல் பெருமான் அருளிய

(திருஎவ்வுளூர்)**
வீரராகவர் பஞ்சகம்

1. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்த          சத்துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

2. பாண்டவர் தூத னாகப் பாலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர் வாழ் வீரரா கவனே போற்றி.

3. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி  வேதியன் தன்னை ஈன்ற வீர ராகவனே போற்றி.

4. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே  களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்கு நல் எவ்வுளூர் வாழ் வீரரா கவனே போற்றி.

5. அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணி தீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

சிவம் சுபம்

**திருவள்ளூர்

audio1
audio2

Samastha Aparadha Kshamapana Slokham (Siva Ranjani)

OM

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிய "ஸமஸ்தாபராத க்ஷமாபண ஸ்லோக" த்தின் தமிழாக்கம் by கவிஞர் பொன்னடியான்.

ஆயிரம் பிழை குற்றம் செய்திட்ட போதும்,  அன்னையே! குழந்தை என்னை அசட்டை செய்யாதே.  மாய யிருள் சூழும் இந்த மாநிலம் மீது மைந்தன் நான் செய்த பிழைகளை மன்னிப்பாயே, ஆயிரம் கோடி அண்டங் கட்கும் அன்னையே! அனவரதம் என் மேல் அன்பு பொழிவாய் எனில் வியப்பு இதிலென்ன, தயைமிகும் தேவியே! துர்கையே! மாதே துணை வருவாயே.

சிவம் சுபம்

audio

Naadiya Porul Kaikoodum (Hindolam)

Kambarin Raaman
Hindolam
--------------------------
Naadiya Porul Kaikoodum Gnanamum Pugazhum Undaam
Veediyal Vazhiyadhagum Veriyankamalai Nokkum
Neediya Arakkar Saenai Neeru Pattazhiya Vaagai
Soodiya Silayiraaman Tholvali Kooruvaarukkae
Nanmayum Selvamum Naalum Nallkumay
Thinmayum Paavamum Sidhaindhu Thaeyumae
Jenmamum Maranamum Indri Theerumaey
Inmayey Rama Endra Irandu Ezhuthinaal

Sivam Subam

audio

என்னை விட்டு அகலாதேடா ராமா (Revati)

ரேவதி

என்னை விட்டு அகலாதேடா ராமா, என் நெஞ்சை விட்டு விலகாதேடா, ராமா

கல்லுக்கும் உயிரளித்த கருணா மூர்த்தி, வில்லுக்கு பெருமை சேர்த்த வீர ராம மூர்த்தி

அன்னையின் சொல்லுக்கு அடி பணிந்தவா, தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டவா, தாரம் ஒன்றே என்று வாழ்ந்து காட்டியவா, தஞ்சம் என்போருக்கு அஞ்சேல் என்றருள்பவா

சபரியின் கனி உண்டு மோக்ஷ மளித்தவா,  அரக்கனுக்கும் அபரிமித அருள் பொழிந்தவா
குஹனின் அன்பில் குழைந்த தூயவா, குணமிகு அனுமனுள் அமர்ந்த ஆண்டவா

சிவம் சுபம்
audio