Tuesday, April 7, 2015

அங்கயற் கண்ணியை !


அங்கயற் கண்ணியை !
ஆடல் அறுபத்தி நாலு புரிந்தாளை!
இச்சை க்ரியை ஞான பரா சக்தியை!
ஈசன் உயிர் காத்த கரத்தாளை!
உண்மைப் பொருளை!
ஊமையைப் பாட வைத்தாளை!
எங்கும் நிறைந்தாளை!
ஏகனுக்கு தன்னில் பாதி ஈந்தாளை!
ஐங்கரனை படைத்தாளை!
ஒப்பிலா முதல்வியை!
ஓம்கார ஹ்ரீங்காரியை!
ஔதார்ய பரம்பொருளை! அடிபணிந்துய் வோமே.

audiolink

No comments:

Post a Comment