Sunday, September 2, 2018

MS Amma 2018 - SLC - Singing Session on Sept 16th 2018 (4PM-6PM)

Agenda with Audio Links

(Download all mp3 files in single Zip file here )

(Each mp3 can be played by clicking on the leading line of each song)

Starting @ 4PM on September 16th 2018. We shall end the program by 6PM. 

3  kalainiRaigaNapati saraNa~n saraNam

gajamukha guNapati saraNa~n saraNam
talaivanin iNaiyaDi saraNa~n saraNam
saravaNa bhavaguha saraNa~n saraNam
silaimalai yuDaiyava saraNa~n saraNam
sivasiva sivasiva saraNa~n saraNam
ulaivaRum oruparai saraNa~n saraNam
umaisivai ambikai saraNa~n saraNam 

5.  Maa Ramanan- Hindholam - Tamil 

pallavi
maa ramaNan umaa ramaNan
malaraDi paNi manamE dinamE
(maa)

anupallavi
maara janakan kumaara janakan
malai mEl uraibavan paarkaDal
alai mEl tuyilbavan paavana

charaNam
aayiram peyaraal azhaippinum
aayiram urumaarinum - uyar
taayin migu dayaaparan padam
tanjam enbavarai anjal enraruLum


 6shiva shiva shiva enarAdA  (Oree)PanthuvaraaLi     - Aadhi Taalam 

pallavi
shiva shiva shiva enarAdA  (Oree)

anupallavi
(Ori) bhavabhaya bAdala naNacukO rAdA

caraNam 1
kAmAdula dega kOsi 
para bhAmala parula dhanamula rOsi
pAmaratvamu eDabAsi 
ati nEmamutO bilvArcana jEsi

caraNam 2
sajjana gaNamula gAnci (Ori) 
mujjagadIshvarulani mati nenci
lajjAdula dolaginci,  tana 
hrj-jalajamunanu  pUjinci 

caraNam 3
Agamamula nutiyinci 
bahu bAgulEni bhAshalu cAlinci
bhAgavatula pOSinci
vara tyAgarAja sannutuDani yenci  


Pallavi
Nannu kanna thalli bhagyama,
Naarayani , Dharmaambigae

Anupallavi
Kanakaaangi , Ramaa pathi sodhari,
Kaavave nannu Kaathyaayini

Charanam
Kaavu Kaavumani nae mora pettaga,
Kamala lochani karaguchundaga,
Neevu brovakonte yevaru brothuru,
Sadaa varam-bosagu Thyagaraja nuthe  


vAsudEva kamalAsana vandita. rAgA: cenjuruTi. Adi tALA.

1: vAsudEva kamalAsana vandita shESa shayana raaraa  raa KrishNaa
  dAsuni nannitu mOsamu jEsitE dOSamu nIkErA

2: mandaradhara muchukunda varada sankrandana mrdu charaNA KrishNaa
brundAraka munibrunda vandita sundara ripu charaNaa

3: geTTivADavani paTTidi nI ceyi paTTiviDuvarAdu Krishnaa  
vaTTimAyalO nanu talikinchite eTTuva nE proddu

4: sharaNu sharaNu bhU ramaNa dayAkaraa karuNajUDaraa raaraa raa KrishNaa
 dharaNilOna karipuramuna velasina narahari dayarAdA

9. Kurai Ondrum Illai 


kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
kuRai onRum illai kaNNaa
kuRai onRum illai GOvinthaa

anupallavi shiva ranjani

kaNNukku Theriyaamal niRkinRaay kaNNaa
kaNNukku Theriyaamal ninRaalum enakku
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa

caraNam shiva ranjani

VEndiyathai thanNthida VEnkaTEsan enRirukka
VEndiyathu VERillai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

caraNam kaapi

thiraiyin pin niRkinRaay kaNNaa - unnai
maRai Othum NYaaniyar mattuME kaaNpaar
enRaalum kuRai onRum enakkillai kaNNaa

caraNam kaapi

kunRin MEl kallaaki niRkinRa varathaa
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

caraNam sindu bhairavi

kalinNaaLukkiranNgi kallilE iRangi
nilaiyaaga KOvilil niRkinRaay KEsavaa

caraNam sindu bhairavi


yaathum maRukkaatha malaiyappaa - un maarbil
Ethum thara niRkum karuNai kadal annai
enRum irunthida Ethu kuRai enakku
onRum kuRai illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

10. Tribute Song to MS Amma in Mohanam to be sung by Appa


maitrIm bhajata, akhila hrit jaitrIm |
Atmavad Eva parAnn api pashyata |
yudhham tyajata, spardhAm tyajata |
tyajata parEShu krama-AkramaNam ||

jananI prithivI kAma-dukhArtE |
janako dEvah sakala dayALuh |
'dAmyata, datta, dayadhvam' janatA |
shrEyO bhUyAt sakala janAnAnAm ||
shrEyO bhUyAt sakala janAnAnAm ||
shrEyO bhUyAt sakala janAnAnAm 

12. NAADHAVINDHU KALAATHI NAMO NAMA - THIRUPPUGAZH 

naada vindu kalaa- | dee namO nama ||
vEda mandra svaroo- | paa namO nama ||
nyaana panDita swaa- | mee namO nama ||
vegukO- | Di ... ||

naama shambu kumaa- | raa namO nama ||
bOga antari baa| laa namO nama ||
naaga banda mayoo| raa namO nama || 
parasoo- | rar ... ||

shEda danDa vinO- | daa namO nama ||
geeta kiNkiNi paa- | daa namO nama ||
deera samprama vee- | raa namO nama ||
giriraa- | ja ... ||

deepa mangaLa jO- | tee namO nama ||
dooya ambala lee- | laa namO nama ||
dEvakunjari baa- | gaa namO nama ||
aruLtaar- | aay ... ||

MANGALAM - 1st Song

OM MANGALAM OMKAARA MANGALAM 
OM NA MA SI VAA YA GURUVE MANGALAM


"NA" MANGALAM -NA-KAARA MANGALAM 
NAAMA ROOPA NILAYAA-YA GURUVAE MANGALAM 


"MA" MANGALAM - MA-KAARA MANGALAM 
MAHAA DEVA NILAYAA-YA GURUVE MANGALAM 


"SI" MANGALAM - SIVAA YA MANGALAM 
SIDHTHA BUDHDHA NILAYAA-YA GURUVE MANGALAM 


"VA" MANGALAM - VA-KAARA MANGALAM 
VAA-MA ROOPA NILAYAA-YA GURUVE MANGALAM 


"YAA" MANGALAM - YA-KAARA MANGALAM 
YALLAA ROOPA NILAYAA GURUVE MANGALAM 


AANANDA GURUVE MANGALAM 
GNAANANDA GURUVE MANGALAM 



mangaLam mangaLam jaya mangaLam 
mAmava rAjamAtangi 

jaya jaya mangaLam .. mangaLam 
mangaLam jaya jaya mangaLam. 

CaraNam 

gangAdhara yuvatI paramEshvarai mangaLa varadAyini jagadIshvari
sankaTanAshini jayamangaLam sadguruguha janani shubhamangaLam

SIVAM SUBAM 


Sunday, August 19, 2018

என்ன கரிசனம் என் அன்னைக்கு



என்ன கரிசனம் என் அன்னைக்கு, ஏகாந்த தரிசனம் தந்தாளே இன்றெனக்கு...

கன்றழைக்கும் முன் கருதி வரும் ஆ போலே, கடையன் எனக்கும் காட்சி தந்தாள், முத்தங்கி அணிந்து முறுவல் பூத்தாள்.

தலைமகன் கணேசன் அருகமர்ந்தேன், விலை மதிக்க வொண்ணா (அன்னை) பாதம் கண்டேன், சிம்ஹ வாஹினி மந்த ஹாஸினி  ஆனந்த பைரவி அருள் பொழிந்தாள்,   அன்புடன் பூதி குங்குமம்  தந்தாள்

பிறிந்தவர் கூடினால் பேச முடியுமோ, பிடித்தவர் இணைந்தால் பிரிய முடியுமோ, (என்)  உள்ள ஏக்கமெல்லாம் இசையாகி அன்னைமுன் அருவியாய் பொங்கியதே, அன்னையின் சிரமலர் ஒன்றென்னை வாழ்த்தியதே.

வாழிய மதுர காளி யம்மா,  வாழிய சிறுவாச்சூர் தேவியம்மா, வாழிய த்ரிபுர சுந்தரி அம்மா, வாழிய வற்றாத உன் கருணை யம்மா 

சிவம் சுபம்

ப்ரதோஷ வேளையில் வந்துதித்தான் ப்ரஹ்லாத வரதன் நரசிம்ஹன்.



ப்ரதோஷ வேளையில் வந்துதித்தான் ப்ரஹ்லாத வரதன் நரசிம்ஹன்.

ஷண்முகனின் ப்ரிய மாமன், ஸ்வாதியில் 
ஸ்தம்பத்தைப் பிளந்து  வந்தான

நிந்தனை செய்தோனை மடி  வைத்தாட் கொண்டான்.  வந்தனை செய்தோனை வாழ்வாங்கு வாழ் என்றான். அஹோபிலத்தில் தோன்றியவன் அகிலமெங்கும் வ்யாபித்தான்.

சங்கரர்க்கு கரம் கொடுத்தான், மத்வரின் முக்ய ப்ராணன் ஆனான்.  உடையவரின் உடமை ஆனான், தேசிகர் கவியில் சிம்ஹமாய்  ஜ்வலித்தான்,

ஆழ்வார்கள் தமிழ் மாலையும் ஏற்றான், அன்னை லக்ஷ்மியை மடி வைத்தான்,
மரண பயமதைப் போக்கிடுவான். கனக மழையே  பொழிந்திடுவான்.

 சிவம் சுபம்

உம்மடி மலர் துணை போதுமே

file


உம்மடி மலர் துணை போதுமே, மூவுலகும் என் வசமாமே

திருமகள் அளித்த பெரும் கொடையே, மலை மகள் காமாக்ஷி மறுவுறுவே..

கலைகளாம் ஞான ஸரஸ்வதியே, அலை பாயா மனமருளும் பெருநிதியே, இந்திரர்க்கும் கிட்டா அருட் குருவே,  ஸ்ரீ சந்திரசேகராராம் சதாசிவமே....

சிவம் சுபம்.



காக்க வச்சு காக்க வச்சு காட்சி தந்தானே - என்னை திட்ட வச்சு திட்ட வச்சு கருணை செய்தானே

அங்கு இங்கும் அலய விட்டு சோதனை  செய்தான், அப்பப்பா பட்ட அசதி என்ன சொல்லுவேன், 

அடுத்த நாளு காலையிலே மனம் இளகி, எளிதாக இனிமையாகக் காட்சி தந்தானே, பைசாக் காசு செலவில்லாம, (அந்த) வட்டிக்காரனை கிட்டப் போயி கண்டு உள்ளம் பூரித்தேனே..

இடையில் காளஹஸ்தீக்கு சென்று வந்தேனே, அந்த ஈஸ்வரனே சிபாரிசு செய்திருப்பானோ, அம்மையப்பனை பார்த்து வந்தவுடனே, என் அருமை மாமனும்
தர்சனம் தந்து விட்டானே.

காளஹஸ்தீஸ்வரா
கபிலேஸ்வரா
திருமலேஸ்வரா ஸ்ரீ
வேங்கடேஸ்வரா..

சிவம் சுபம்.


அனுஷமளித்த ஆதிரையா போற்றி (Mahaperiyavaa Bhajan)



அனுஷமளித்த ஆதிரையா போற்றி.
ஆறாம் வேதம் உரைத்தாய் போற்றி.
இம்மையில் கண் கண்ட தெய்வமே போற்றி.
ஈடில்லாத் தவசீலமே போற்றி.
உலகை உய்விக்கும் ஜெகத் குருவே போற்றி.
ஊழ்வினை மாய்க்கும் மருந்தே போற்றி.
எட்டையும் ஐந்தையும் இணைத்தாய் போற்றி
ஏகனாம் சந்திர சேகர போற்றி.
ஐயமில்லாதருளும் அருட் சுனையே போற்றி.
ஒன்றி அதுவே ஆனாய் போற்றி.
ஓங்கி ஒளிர் ஞான ஸரஸ்வதியே போற்றி
ஔஷதாம்ருதமாம் உம் நாமமே போற்றி.

ஜெய ஜெய சந்திர சேகர போற்றி
ஹர ஹர சந்திர சேகர போற்றி.

சிவம் சுபம்

மூவுலகும் ஒரு குடும்பமே



மூவுலகும் ஒரு குடும்பமே, அதுவே சிவ குடும்பமாம் சத்யமே

அங்கயற்கண்ணியே நம் அன்னை - ஆலவாய் சுந்தரனே நம் அய்யன்.

முக்குறுணியோனும் மூவிரண்டு முக குன்றக் குமரனும் (நம்)  அருமை சோதரர் ஆவாரே, பல்லாண்டு கொண்ட கூடல் அழகனே அருள் வடிவான நம் தாய் மாமனே 

மதுரவல்லியாம் திருமகளே நம் அருமை மாமி ஆவளே, ,
அஞ்சனை செல்வனாம் அசகாய தீரனே நமை காக்கும் அரண் ஆவானே.
அறுவத்து மூவரும் ஆழ்வார்களும் நம் சுற்றமும் நட்பும் ஆவாரே.. 

சிவம் சுபம்

Sri Hanuman Song


File 

மூலத் துதித்த முத்து.
முக்கண்ணன் அம்ஸ வித்து.
அன்னை சீதையைக் காத்த சித்து.
இராம நாமப் பித்து.
அடியவர் குல சொத்து.

மந்தியாய்த் தோன்றி விந்தை பல புரி வித்தகன்...  சூரியனாரின் சீடன், சுந்தர ரகுராம பத்தன்.

அஞ்சனை இவனை ஈன்றாள், இவனோ புவி மகளைத் தாயாய் பெற்றான்.

செயற்கரிய செய்யும் ஜித்தன், செத்தவரையும் மீட்கும் சித்தன்,
காலனைக் காமனை வென்றவன்,   
அண்ணலை உள் வைத்த ஆலயன்.

தரும ராமனுடன் வாழ்ந்தான், அத் தருமம் உரைத்த கண்ணன் கொடி பறந்தான்,
 அவதார ராமனும் கண்ணனும் மறைந்தார்
இவனோ இன்றும் நம்மிடை வாழ்கிறான்.

சிவம் சுபம்

உன்னை எண்ணி நாளைத் துவக்குவேன் (Vasanta)

உ (வசந்தா)

உன்னை எண்ணி நாளைத் துவக்குவேன். உன்னைப் பணிந்தென் நாளை நடத்துவேன்

 (என்)  கண்ணின் கருமணியே, கற்பகமே மீனாளே

என்னால் ஆவதொன்றுமில்லை, உன் அருளிக்க கவலை எனக் கில்லை, ஆலத்தை அமுதாக்கும் அன்னை நீ அருகிருக்க, வேதனை என்னை அணுகுமோ, வேழனை யீன்ற மாயே

ஆடலில் வல்லானையே ஆட்டுவிப்பாயே, அரவணை துயில்வோனை அவதாரம் செய்ய பணிப்பாயே, வேதன் மனையாளின் வீணையை பழிக்கும் குரலாளே,   உன் பாதம் பிடித்த எனக்கு எல்லாமே ஜெயமே...

சிவம் சுபம்.

Sivarathri Pradosha Songs Series - 1 to 6

Song 6-1
Song 6-2
Song 5-1
Song 5-2
Song 4
Song 3
Song 2
Song 1
Song 0




சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டு ப்ர்ர்த்தனை 6

வள்ளல் பெருமானின் "நடேசர் கும்மி"

காமம் அகற்றிய தூயனடி - சிவ காம சவுந்தரி நேயனடி
மா மறை ஒது செவ்வாயானடி - மணிமன்றமெனும் ஞானாகாயனடி

ஆனந்த் தாண்டவ ராஜனடி - நம்மை ஆட்கொண்டருளிய தேஜனடி
கல்லைக் கனிவிக்கும் சுத்தனடி - முடி கங்கைக் கருளிய கர்த்தனடி

தில்லைச் சிதம்பர கூத்தனடி - தேவ சிங்கமடி உயர் தங்க மடி
பெண்ணொரு பால்வைத்த மத்தனடி - சிறு பிள்ளைக் கறி கொண்ட பித்தனடி

அம்பலத் தாடல் செய் ஐயனடி - அன்பர் அன்புக் கெளிதரும் மெய்யனடி
தும்பை முடிக்கனி தூயனடி - சுயஞ் ஜோதியடி பரஞ்சோதியடி

சிவம் சுபம்



சிவராத்ரி - கூட்டுப்ரார்த்தனை - 5
திருவாசகம் - மணிவாசகப் பெருமான்

கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி!
விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி!
உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி!
சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!

பாட வேண்டும் நான் போற்றி நின்னையே
பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு
ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்
வீட வேண்டும் நான் போற்றி வீடு தந்து
அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே !

சிவம் சுபம்.



சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டு ப்ரார்த்தனை

தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார்....

பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன் -  திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் -
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் -
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் -
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் -
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…

சிவம் சுபம்



சிவராத்திரி/ப்ரதோஷ கூட்டுப் ப்ரார்த்தனை - 3

தேவாரம் - திருநாவுக்கரசர் பெருமான்

தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத் தலையே நீ  வணங்காய்

கண் காள்  காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை
என் தோள்  வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்  காள்  காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவம் எம் இறை செம்பவள
எரிப் போல்  மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ

நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்

கைகாள்  கூப்பித் தொழீர், கடி மா மலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த  பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்

ஆக்கையாற்  பயனென் - அரன்  கோயில் வலம்  வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி யென்னாத இவ் யாக்கையாற்  பயனென்

உற்றார் யாருளரோ - உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்
துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளரோ

தேடிக் கண்டு கொண்டேன் - திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கொண்டு கொண்டேன்.

சிவம் சுபம்.


சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டு ப்ராரத்தனை - 2

தேவாரம் - சம்பந்தப் பெருமான் -

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் தேட ஆங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

சிவம் சுபம்.

(ப்ரார்த்தனை தொடரும்)



அரி தேடும் மலர் பாதன்.
அயன் காணா சிர முடியன். 

மரகத பவள மேனியன்,
ஆலமுண்ட கண்டன், அம்மை யப்பன்.

மான் மழு  சூலம் ஏந்தும் கையன், தான் அகன்றோர்க் கருளும் வலக்கையன்,  புலித் தோலணி இடையன், புனித கங்கை தாங்கும் சடையன்.

ஐந்து சபா நாதன்,
ஐம்பூதத் தலைவன்,  ஐந்தொழில் புரியும் ஈசன், ஐந்து முகம் கொண்ட இறைவன், ஐந்தெழுத்து நாம நமசிவாயன்.

சிவம் சுபம்

ஓம்

சிவராத்திரி/ப்ரதோஷ கூட்டு ப்ரார்த்தனை  -

1.   திருமந்திரம்   - திருமூலர் -

ஐந்து கரத்தனை ஆனை  முகத்தனை  - இந்தின்  இளம் பிறை போலும்  எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

அப்பனை நந்தியை ஆரா அமுதினை , ஒப்பிலி வள்ளலை ...ஊழி முதல்வனை
எப்பரிசாயினும்  ஏத்துமின் ஏத்தினால், அப்பரிசு ஈசன் அருள்  பெறலாமே

அரகர  என்ன அரியது ஒன்றில்லை  அரகர என்ன  அறிகிலர் மாந்தர்
அரகர  என்ன அமரரும் ஆவார் ..அரகர என்ன அறும்  பிறப்பன்றே

உள்ளம் பெரும் கோயில் ஊனுடம் பாலயம், வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே

சிவாய நம என  சித்தம்  ஒருக்கி, அவாயம் அறவே அடிமையதாகிச்
சிவாய சிவ சிவ  என்றென்றே சிந்தை ...அவாயம் கெட நிற்க  ஆனந்தம் ஆமே

சிவம் சுபம்

(ப்ரார்த்தனை தொடரும்)


எல்லாம் தருவார் ஈசனே (Pradosha Song)

[4:40 PM, 2/12/2018] Appa: சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டுப்ரார்த்தனை - 7

ஸ்ரீ லிங்காஷ்டகத்தினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே உண்டாகும்.

நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

சிவம் சுபம்


சிவராத்திரி / பிரதோஷ கூட்டு பிரார்த்தனை 7

வடலூர் வள்ளல்  பெருமான்  -
திருவருட்பா - சிவா த்யான/திருநீற்று மஹிமை - அன்பே சிவம்

எல்லாம் தருவார் ஈசனே 

ஊர் தருவார்  நல்ல ஊண்  தருவார் உடையும் தருவார்
பார் தருவார் உழற் கேர் தருவார் பொன் பணந்தருவார்
சோர் தருவார் உள்  ளறிவு கெடாமல் சுகிப்பதற்கிங்(கு)
கார் தருவார் அம்மையார் தரு பாகனை யன்றி நெஞ்சே

எல்லாம் அளிக்கும் திருநீறு

பாடற்  கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய  அடியவர் தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என் ஆணை கண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே

அன்பே இறை

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும்  வலைக்கு உட்படு பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி  அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே

சிவம் சுபம் 

Sri Guru Bhajan



சரணம் சரணம் குரு தேவா
சரணம் தரணும் சத் குரு  தேவா

அத்வைத சங்கர சரணம் சரணம்
த்வைத மத்வ சரணம் சரணம்
விசிஷ்டாதவைத ராமனுஜ சரணம்
விரைநதருள் புரிவீர் குருதேவா

ப்ருந்தாவன ராயரே சரணம்
பகவான் ராம க்ருஷ்ணரே சரணம்.
மாதா ஸாரதே சரணம் சரணம்.
மஹனீய விவேகானந்த சரணம்.

மீனாக்ஷி ஸுத குழந்தை சரணம்
காமாக்ஷி ஸுத சேஷாத்ரி  சரணம் 
ஷண்முக பகவன் ரமணா சரணம்.
ஷண்மத சந்திர சேகர சரணம்.

சன்மார்க்க ராம லிங்கா சரணம்
பரம பாவன ஞானானந்தா சரணம்.
ஷீரடி நாத சாயி சரணம்.
பரப்ரஹ்ம பர்த்தி பகவன்  சரணம்.

சரணம் சரணம் குரு தேவா
சரணம் தரணும் சத் குரு  தேவா

சிவம் சுபம்

Childrens' Daily Bhajan 2 Mooshiga vaaahana Namosthuthae

Childrens' Daily Bhajan 2

Mooshiga vaaahana Namosthuthae
Moolaadhaaraa Namosthuthae

Mothaga Hasthaa Namosthuthae
Moksha Pradhaayaga Namosthuthae

Chamaara KarNa Namosthuthae
Chathur Veda priya Namosthuthae

ViLambitha Soothra Namosthuthae
Vyaasa Poojitha Namosthuthae

Vaamana Roopa Namosthuthae
Vaathsalya Dhaaraa Namosthuthae

Vigna Vinaayaga Namosthuthae
Vidyaa Pradhaayaga Namosthuthae

Naaga Booshanaa Namosthuthae
Navagraha vandhitha Namosthuthae

Mahaa Ganapathi Namosthuthae
MangaLa Mooruthi Namosthuthae.

Sivam Subam

எத்தனையோ கோயில் கண்டு வந்தேன்



எத்தனையோ கோயில் கண்டு வந்தேன்....நான் குடியிருந்த கோயிலை  காணவில்லை

உலகன்னையை தினம் தொழுகினறேன், (என்ககு) உயிரளித்த  அன்னையைக் காணத் துதிக்கின்றேன், துடிக்கின்றேன்

மறைந்தவளை நான் மறக்கவில்லை, அவள் நினைவென்னை விட்டு விலகவில்லை,    (ஒரே) ஒரு முறை அவளைக் கண்டுவிட்டால், அவள் கரம் பிடித்து என் கண்ணில் ஒற்றிடுவேன், வரும் கண்ணீரால் பதம் நனைத்து
பிணைந்திருப்பேன், மீண்டும் பிறவாமல் சுகித்திருப்பேன்.

"அம்மா அம்மா" வென்று அர்ச்சிப்பேன், அவள் மடி தலைவைத்து என்னை இழப்பேன், (தன்) நெற்றிக் குங்குமத்தை எனக்கிட்டு இனிப் பிரியேன் எனறென்னை அணைத்திடுவாள்..... தன்னுள் என்னை இணைத்திடுவாள்.

சிவம் சுபம்.

Children daily Bhajan 3 தாயே நம் முதல் தெய்வம்

Children daily Bhajan 3

தாயே நம் முதல் தெய்வம், தந்தை அவள் அறிவித்த தெய்வம்.

தந்தை காட்டிய ஆசானே குருவாம் நம் ஆண்டவன்....இம் மூவரே நம் கண் கண்ட தெய்வம்.

தாயே நாம் ஆலயம்.
தந்தை சொல்லே மந்திரம்.
குருவே நம் வழிகாட்டி, இம்மூவரே நமை காப்பார் ..  வினை ஓட்டி.

உருவெடுத்து வந்த  கடவுளரை கருத்தினில் வைத்துப் போற்றினால்,
அருவான தெய்வமும் அகம் நெகிழும், இச்செகம் போற்றும் வாழ்வும் தந்தருளும்.

சிவம் சுபம்.

Song on Sri Ramakrishna



ராமரை மிஞ்சிய தர்ம பாலனர்
கண்ணனிலும் எளிய தர்ம போதகர்.

வங்காளம் கண்ட கதாதரர்
வானோரும் வணங்கும்
ராம க்ருஷ்ணர்.

அல்லா ஏசுவையும் கண்ட அகண்ட மனம்.
மதங்களை இணைத்த
விசால(அ)த்வைதம்

மனையாளுள்
மஹேஸ்வரியைக் கண்ட ஞானத்தவம்.
மஹிதலம் உய்ய அளித்த விவேக ஆனந்தம்

ஜெய ஜெய சாரதானந்தா
ஜெய ஜெய நரேந்திர வந்திதா
ஜெய ஜெய
பரமஹம்ஸா
ஜெய ஜெய 
பகவத் ஸ்வரூபா

சிவம் சுபம்

நரசிம்மன் அருளாலே விடுகிறோம் மூச்சு



நரசிம்மன் அருளாலே விடுகிறோம் மூச்சு,
அவன் பேச்சன்றி நமக்கெதற்கு வேறு பேச்சு.

நரமேனி கொண்ட புருஷோத்தமன், சிம்ம முகத்து சுகுணோத்தமன்.

அகலமெங்கும் வ்யாபித்த அஹோபிலத்தான், அன்பனுக்காய் ஒரு தூணுள் நின்றான்.
அரக்கனையும் தன் மடிவைத்த நாரணன்.
இரக்கமே வடிவான இதய "கமல"ன்.

வந்தான், நின்றான், ஜ்வலித்தான், ஆட்கொண்டான், அருள் பொழிந்தான், மறைந்தான், நிந்தித்து நினைந்தவர்க்கே காட்சி என்றால் சிந்தித்து தொழுவோற்கு தாரானோ மாட்சி. 

ஜெய தருண சிம்மா!
ஜெய கருண சிம்மா!
ஜெய சுகுண சிம்மா!
 ஜெய ஜெய நரசிம்மா!
ஜெய சுப நரசிம்மா!

சிவம் சுபம்

கணபதி என்றிட தடைகள் விலகும்.

Children special 3

கணபதி என்றிட தடைகள் விலகும்.
சாஸ்தா என்றிட தவம் சிறக்கும்.
கந்தா என்றிட வெற்றிகள் குவியும்,
பைரவா என்றிட பயம் விலகும்.

நாரணா என்றிட நற்பலன் கிட்டும்
நாரணி என்றிட கனகம் பொழியும்.
ராமா என்றிட நந்நெறி தழைக்கும்
கண்ணா என்றிட ஞானம் சுரக்கும்

நரசிங்கா என்றால் எதிர்ப்புகள் மாயும்,
நா-மகள் என்றிட கலைகள் மலரும்
சக்தி என்றிட ஊக்கம் பெருகும்
சிவ சிவ என்றிட சுபம் நிலைக்கும்.

அனுமனை நினைத்திட
மரணம் விலகும்.
குருவை நினைக்க திருவருள் பொழியும்.
தந்தையை நினைக்க
விந்தைகள் நடக்கும்.
தாயை நினைக்க அனைவரும் அருள்வர், அனைத்தும் கிட்டும்.

சிவம் சுபம்.

அன்பு தெய்வம் மீனாக்ஷி

ஓம்

அன்பு தெய்வம் மீனாக்ஷி - (என்)
ஆசைத் தெய்வம் மீனாக்ஷி

இதய தெய்வம் மீனாக்ஷி
ஈடில்லா தெய்வம் மீனாக்ஷி

உண்மைத் தெய்வம் மீனாக்ஷி (என்)
ஊணுள் கலந்த தெய்வம் மீனாக்ஷி 
என் இட்ட தெய்வம் மீனாக்ஷி
ஏக தெய்வம் மீனாக்ஷி

ஐமுக தெய்வம் மீனாக்ஷி -  (மனம்)
ஒன்றும் தெய்வம் மீனாக்ஷி
ஓங்கார ப்ரணவம் மீனாக்ஷி.
ஔஷத அம்ருதம் மீனாக்ஷி.

சிவம் சுபம்

Paranjyothi Munivar Paattu



விருத்தம் - திருவிளையாடல் புராணம்

செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து
செங்கோலோச்சி முழுதுலகுஞ் சயங் கொண்டு திறைகொண்டுந்தி
கண முனைப்போர் சாய்த்துத் தொழுகணவற்கு  அணி மணமாலிகை சூட்டித் தன்மகுடஞ் சூட்டிச் செல்வந் தழைவுறு
தன்னரசளித்த பெண்ணரசி அடிக் கமலம் தலைமேல் வைப்பாம்

ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்

சோம சுந்தரா சொக்கநாதா... ஆலவாய் வள்ளலே, அருள் புரி ஈசரே

ஆண்டி வேடம் களைந்து அங்கயற் கண்ணியை மணந்து,  செங்கோலேந்தி மூவுலகாளும்......

புதன் தொழும் அற்புதரே, வலது பதம் தூக்கி யாடும்  ஆனந்தரே, வந்திக்கு ஊழியம் செய்த வாணரே, ஏழைத் தருமிக்கு பொற்கிழிப் பாட்டளித்த புலவரே.

(நீர்) ஆடாத ஆட்டம் உண்டோ அய்யா, நீர் போடாத வேடமுண்டோ மெய்யா, எல்லாம் வல்ல சித்தரே, கள்ளம் தவிர்த்தோர் உள்ளப் பித்தரே....

சிவம் சுபம்

Sabari Sabari endru kooru.



Sabari Sabari endru kooru...  abarimithak karuNai pozhiyum paaru...

SaraNam koovip paadu... Divya darisanam kidaikkum joru..   

Kaaththidu mandala nonbu, thaanae siranthidumae un maaNbu, Irumudi thaangi yaathirai thuvanga, inbamae pongum un thunbam neenga. 

Malaiyaeri sendraal pothum, Ayyan manam paagaai urugi irangum (iLagum), (Ayyan) nei Abhushekam kaaNa, (un) mei silirkkum, manam niraiyum, MangaLam nilaikkum.

Sivam Subam

ஜெய் ஸ்ரீ குருராயா



ஜெய் ஸ்ரீ குருராயா!

வைகைக் கரைக்கு வாருங்கள், வானவரும் போற்றும் (குரு) ராயரைக் காணுங்கள்.

புவனகிரி தந்த புண்ணியர், பேச்சியம்மன் படித்துறையிலே பேரருளுள் பொழிகிறார், (அருள் பெற்று) உய்யுங்கள்.

மா மதுரை வந்த மஹனீயர் மரகத மீனாளைக் கண்டாரே, அவள் கர ஔஷதம் உண்டாரே, அய்யன் வேண்ட அன்னையும் துங்கைக் கரையில் அமர்ந்தாளே, மாஞ்சோலை அம்மனாய் நிலை கொண்டாளே.

ஆலவாயில் ஒரு மந்தராலயம் - ஆனந்தமருளும் குரு ஆலயம், வலம் வந்தால் போதும், (தெய்வ) பலம் பெருவோம், பணிந்தெழுந்தால் போதும், ப்ரஹ்லாதன் ஆவோம்.

சிவம் சுபம்.


(SwamigaL is the Avathaara roopam of Sri Prahlaathaa, the Siranjeevi. By offering PraNams to Swami we will also live for ever,  as another Siranjeevi,viz. Prahlaathar).

Sivam Subam


குருராயா குருராயா (Sivaranjani)



Children's Bhajan 5
சிவரஞ்சனி

குருராயா குருராயா
குருராயா - குவலயம் போற்றும் எங்கள் குருராயா.

என்ன புண்யம் செய்தோமோ குருராயா - குருவாரம் உமைத் தொழுது தன்யரானோம்.

முன்பு ப்ரஹ்லாதனாய்
நர சிம்மரைக் கொணர்ந்தீர் - இன்று ராகவேந்திரராய் எம் பவம் களைந்தீர் -
என்றும் வாழும் தேவா உம் மந்த்ராலயமே, பூவி வாழும் நல்லோரின் சரணாலயமே

கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவே, கெட்டதை விலக்கிடும் எங்கள் காவல் தெய்வமே,
என்றும் உம்மை மறவா மனமருளி,  உம் ப்ருந்தாவன நிழலில் தஞ்சம் தாரும்.

சிவம் சுபம்.

கனகம் பொழியும் துர்கை (Suddha Dhanyaasi)

உ (சுத்த தன்யாசி)

கனகம் பொழியும் துர்கை, இக்ககனம்  காக்கும் துர்கை

க்ருஷ்ணா நதி தீர  துர்கை
க்ருஷ்ண சோதரி துர்கை

வெற்றிச் செல்வி துர்கை
விஜயவாடா ஒளிர் துர்கை
பாதம் பற்றி பணிவோம்,
பவம் களைந்து சுகிப்போம்.

நள்ளிரவிலும் ஜ்வலிக்கும் துர்க்கை,
நாற்கரம் கொண்டருளும் துர்கை,
மங்கலம் பொழியும் துர்கை,
மாதா கனக துர்கை,
மாதா கனக துர்கை.

ஸர்வமும் எனக்கு நீரே ஸ்வாமி,



ஸர்வமும் எனக்கு நீரே ஸ்வாமி,
விழுப்புரம் அளித்த மெய்ப்பொருளாம் மஹா ஸ்வாமி.

உம் நிழலன்றி வேறு புகல்  தேடேன்.
உம் தாளன்றி வேறொரு பாதம்  நாடேன்.

காஞ்சி வாழ் கனகமே,  காமகோடி ஸ்ரீ சந்தர சேகரமே,
கலியில் எம்மிடை நடமாடும் தெய்வமே, சலிக்காதெம் குறை களையும் இறையே.

(தெய்வமே) உம் குரலே எமக்கு வேதம்,
உம் நாமமே எமக்கமுதம், உம் தர்சனமே பாப விமோசனம், உம் ப்ருந்தா வனமே கைலாய வைகுண்டம்.

சிவம் சுபம்

செவ்வேளுக்கு செவப்பு சாத்தி அலங்காரம் (No Audio)



செவ்வேளுக்கு செவப்பு சாத்தி அலங்காரம்.
வெற்றிவேலரு வெட்டிவேரு சப்பரத்தில் அனுக்ரஹம்.

செந்துர் கடற்கரையிலே ஒரு சன-சமுத்திரம், காந்தமா இழுத்திடும் நம்ம கந்தப் பெருமானின்  திரு   மேனி சந்தனம்.

சூரனை ஆட்கொண்ட தேவரை, சுத்தி சுத்தி வந்து பாதம் தொட்டு பணிவோம், (பால) சுப்பிரமணிய தேவரை
"கப்"புன்னு பிடிச்சிகிட்டா போதும், எதிரிக ளெல்லாம் கப்பு-சிப்புன்னு அடங்கிப் போவாக... 

அப்பன் தோளமந்த சாமி அவரு தப்பாம காட்சி தருவாரு, அம்மைக் கர வேலைக் கொண்டு நம்மைக் காத்து ரட்சிப்பாரு.

அரோகரா...அரோகரா...
ஆறுமுக சாமிக்கு அரோகரா..
அரோகரா...அரோகரா...
அரோகரா...அரோகரா...

சிவம் சுபம்

நந்தகுமாரா நந்தகுமாரா லீலைகள் புரிய வந்த குமாரா



நந்தகுமாரா நந்தகுமாரா லீலைகள் புரிய வந்த குமாரா -
நந்தகுமாரா பந்தம் அராயா, பாதம் தாராயோ நந்தகுமாரா

சிறையில் பிறந்த லீலாவதாரா - கோகுலத் தொளிர்நத பூர்ணாவதாரா - கீதாச்சார்ய ஞானாவதாரா, பீஷ்மரும் தொழுத க்ருஷ்ணாவதாரா

ஒரு தாய் மடியில் பிறந்தவனே, மறுதாய் மடியில் மறைந்தவனே,
எத்தனை அரக்கரை அழித்தாய் அய்யா, எண்ணற்ற அன்பரைக் காத்தாய் மெய்யா   

அக்ருர விதுரரின் மனம் கவர்நதாய்,   சகா தேவனால் கட்டுண்டாய், கள்ளமில் கர்ணனை ஆட்கொண்டாய், உள்ளத்தால் உயர்நதோனின் உரிமை மீட்டாய்.

த்வாரகை ஆண்டாய் நீரில் மிதந்தாய்,
குரு வாயூர் புரம் சேர்ந்தாய்,  நாராயணீய நாயகனே, உன் மென் மலர் மாதமே என் புகலே.

க்ருஷ்ண கோவிந்த வாஸுதேவா, ருக்மிணி நாதா பரந்தாமா,
நாராயணா ஸ்ரீமந் நாராயணா,  பக்த வத்ஸல பரம தயாளா!

சிவம் சுபம்

எத்தனை நாளு ஓடுமோ இந்த வண்டி (With Vallalar Virtuhham)

Om

கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே 
உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே

- வள்ளல் பெருமான்.

எத்தனை நாளு ஓடுமோ இந்த வண்டி மனமே தெரியாது... எத்தனை நாளு எஞ்சியிருக்கோ, (மனமே) சொல்லிக் கடத்து சிவ நாமம்.

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி, (அவன்) ஆலடி அமர்ந்த தக்ஷிணா முர்த்தி,
ஆலத்தை உண்டு அகிலம் காத்தவன், அன்பு செய்வோரைக் கைவிடானே.

அரியும் அயனும் தேடும் மூர்த்தி, அறுபத்தி மூவரு கண்ட மூர்த்தி, அங்கத்தில் அன்னையை வைத்த மூர்த்தி, அளப்பறியா கருணா மூர்த்தி. 

கால் தூக்கி ஆடுவான், கை கொடுத் தருள்வான்,
விடைமேலமர்ந்து வலம் வருவான், கடையனானாலும் கை கூப்பித் தொழுதா உடனே அருள்வான் உள்ளம் புகுவான்.

சிவம் சுபம்

கண் பாரைய்யா.... நரசய்யா (Bhoopalam)

உ பூபாளம்

கண் பாரைய்யா.... நரசய்யா.... என் கலி தீரய்யா ... லக்ஷ்மீ நரசய்யா...

வேகமே உந்தன் மாண்பல்லவோ ..... வேண்டுமுன் அருளுவதுன் பெருங் குணமல்லவோ

கனகனுக்கும் காட்சி தந்த வள்ளலலே, அவனை மடிதாங்கிய ஸ்ரீ நரஹரியே, நானந்த ப்ரஹ்லாதன் இல்லை யாயினும், உன்  நாமம் நவிலும் பாமரனன்றோ?

உடனே எனக்குன் முகம் காட்டு, உன் பாதம் என் சிரம் வைத்து அருள் கூட்டு.

சிவம் சுபம்.

திட பக்தி தருவாய் நரசிம்மா (Revati)

உ ரேவதி

திட பக்தி தருவாய் நரசிம்மா,
திட சித்தம் அருள்வாய் நரசிம்மா

அலைபாயா மனமருள் நரசிம்மா - அதனுள் அமர்ந்தருள் பொழி வா நரசிம்மா.

தேகாபிமானம் நீக்கிடு நரசிம்மா,
தெய்வாபிமானம் ஊட்டிடு நரசிம்மா,
மூர்க்கரைப் புகழாது காத்திடு நரசிம்மா,
முக்தி மார்க்கம் காட்டிடு நரசிம்மா 

இருக்கும் வரை உனைப் பாடணும் நரசிம்மா
இறந்தால் உனை சேரணும் நரசிம்மா
கனகனுக் கருளிய நரசிம்மா, இக் கடயனைக்
கைவிடாதே நரசிம்மா

சிவம் சுபம்

தணலாய் தோன்றித் தண்ணருள் (Yemen Kalyaani)

உ  யமன் கல்யாணி 

தணலாய் தோன்றித் தண்ணருள் பொழிந்த தேவன் - தன்னை நிகரில்லா நர ஹரி ரூபன்.

தூண் பிளந்து வந்த அஹோபிலன்
"தான்" அகன்றோர் உள்ள வாசஸ்தலன்

அன்னயே பயந்த உக்ர சிம்மன், அன்பன் நயந்த சாந்த சிம்மன், அத்புத அவதார நரசிம்மன், அதி அத்புத ப்ரஹ்லாதன் அழைக்க வந்தவன்.

நினைந்தாலே போதும் நிம்மதி பெறலாம்,
துதித்தால் போதும்,
எதிர்ப்புகள் மாயும், (அவனை) வலம் வந்தால் பலம் சேரும்,
சந்ததியும் சாகா வரம பெற்றுய்யும்.

சிவம் சுபம்.

Thaayum neeyae thanthaiyum neeyae (Hindholam)

Hintholam

Thaayum neeyae thanthaiyum neeyae Narasingaa... sotharan neeyae.. sakaa neeyae Narasingaa.. (sakalamum neeyae Narasingaa) 

Vidyai-yum neeyae, gnanamum  neeyae en selvamum neeyae Narasingaa...

uLLum neeyae, puramum neeyae Narasingaa, naan engengu sendraalum angelaam neeyae Narasingaa , unai-yandri or(u) Deivam naan ariyanae Narasingaa, athanaal unnai-yae nambi un saraN pugunthaen Narasingaa.

Sivam Subam

Mantha-haasa vadhanan avanae



Mantha-haasa vadhanan avanae
Malar-magaLai madi vaiththavan,
Simma mugaththu Sundaran avanae
Nandavanathurai Narasimhanaam

ThooNilum thurumbilum iruppavan avanae thooyavar uLLaththil nilaith-thiruppaan, yaeno andha Kanaganuk-kintha uNmai pulappada villayae. 

Eththanaiyo avathaarangaL iruppinum Narasimha rooparkku iNai undo,
Arakkarai azhikka pala Avathaaram, Anban azhaikku-mun vanthathu ithuvae.

Paanagam padaiththu azhaiththaal pothum, nam agam avan pugunthiduvaanae,  Paatha Kamalam paNinthaal pothum nam paathaga malamathai vaeraruppaan.

Jaya Jaya Simhaa
Jaya Narasimhaa
Jaya Jaya Jaya Jaya
 Nara-Simhaa.
Jaya Jaya Simhaa
Jaya Narasimhaa
Jaya Lakshmi Nara-Simhaa

Sivam Subam

ஆலத்தை அமுதாக்குவாள்


file1
file2

ஆலத்தை அமுதாக்குவாள்,
ஆண்டியை அரசேற்றுவாள்

நாரணன் முகத்தில் பல் விலங்கேற்றுவாள், காரண காரியம் அறிந்தருள் பொழிவாள்.

ஊமையைப் பாட வைப்பாள், யானையைப் பிள்ளை யென்பாள். சிறுவனை வேலனாக்கி சூரனை சம்ஹரிப்பாள். ஐந்தொழில் புரிவாள், ஐயமில்லா தருள்வாள்.

அன்பர் பணி ஏற்பவள்,
அன்பரைக் கைவிடாள்
நளபாகம் படைத்திடுவாள், நால் வேதம் மொழிந்திடுவாள் கும்மிருட்டில் குளிர் நிலவாய் காட்சியும் தந்திடுவாள்,  குவலயம் போற்றிடும் மதுரை மீனாள்.

சிவம் சுபம்

ஜெயேந்த்ர தேசிகமே சரணம்



ஜெயேந்த்ர தேசிகமே சரணம்,  ஸ்ரீ ஜெயேந்திர   தேசிகமே சரணம்.

இருள்நீக்கி  அளித்த  மன யிருள் நீக்கியே, அருள் மழை பொழியும் அம்ருத வாரிதியே

நடமாடும் தெய்வம் தந்த நற்குருவே, நலிந்தோர் குறை களையும் சத்குருவே, சந்த்ரமௌலீச பக்தியுடன் சமரச சன்மார்க்க நெறியையும் போதித்த வள்ளலே, சாதித்த செம்மலே

கல்விச் சாலைகள் அமைத்தீர், நோயகற்றும் வழி சமைத்தீர், எண்ணற்ற ஏழைகளின் இதயம் கவர்ந்தீர், வேதாகம புராண உபதேசம் செய்தே வேற்றுமை களைந்தீர்
உலகுயிரை இணைத்தீர்

கடலும் வானும் உள்ளவரை, சூரிய சந்திரர் ஜ்வலிக்கும் வரை உம் புகழ் நிலைக்கும், உமதருள் எமை காக்கும்.

ஜெய ஜயேந்த்ர சங்கரா
ஜெய ஜயேந்த்ர பெரியவா
ஜெய ஜயேந்த்ர தேசிகா
ஜெய ஜயேந்த்ர க்ருபாகரா.

சிவம் சுபம்

ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவா

ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவா அருளிய குரு வந்தன ஸாஹித்யம்

எப்படிப் பாடினரோ - குரு நாதனை  அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் குருவே

தோடகரும் பத்மபாதரும் சுரேஸ்வராச்சார்யரும் ஹஸ்தாகமச் சார்யரும் சங்கர குருநாதனை

காலடியில் உதித்து கால்நடையாய் நடந்து
காசிவரை காமகோடி பீடமமைத்து,
வேற்றுமையில் ஒற்றுமை சொன்ன வேதாந்த வித்தகரை, வேதனைகளை தீர்த்து வைக்கும் சத்குருநாதனை

சிவம் சுபம்.

என்னுள்ளே இருப்பவளே (Saaveri)



சாவேரி

என்னுள்ளே இருப்பவளே, என்னை வழி நடத்துபவளே... என் தாயே, என் தாயே.

 (என்னை உன்) கண்ணுள்ளே  வைத்து காப்பவளே... கயற்கண்ணியாம் அன்னை மீனாளே..

விண்ணை யளந்தோன் தேடும் பாதமதில் ஒன்று நினதல்லவோ தாயே, (வெள்ளி)  அம்பலத்தாடுவோன் ஊன்றி நிற்கும் பாதம் நினதல்லவோ மாயே, உன்னிரு பாதம் என் சிரம் வைப்பாயே,  மீண்டும் பிறவாதென்னை ஆட்கொள்வாயே...

சிவம் சுபம்

சிவனை நினைந்திட அவம் விலகும், சுபம் பெருகும்.



சிவனை நினைந்திட அவம் விலகும், சுபம் பெருகும்.

காமனை எரித்தவன், காலனை உதைத்தவன்,  ஆலஹாலம் உண்டு அகிலம் காத்த...

இருவர் தேடிக் காண பாதமதை கண்டு தொழலாம் வாரீர், த்வாதசாந்த பெருவெளியாம் மாமதுரை நகருக்கே, வெள்ளியம்பலத்தாடும் கூத்தனின் அழகை அள்ளிப் பருகலாம், அருளை உண்டு நெகிழலாம்.

நவ கோள்களும் நம் வசமாகும், நட்சத்திரங்களும் பக்க துணையாகும்,  கரணங்களும் உப காரணமாகும், எதிர்ப்புகள் மாயும், எண்ணம் நிறைவேறும்.

சிவம் சுபம்.

இறையிடம் நம் அன்பே பக்தி (No audio)



இறையிடம் நம் அன்பே பக்தி,
இறை நமக்கருள்வதே சக்தி

இறைவனை வணங்க வேண்டும் பக்தி, பக்தி செய்தால் கிட்டுமே முக்தி.

இறையே நம் ஜீவனாவார், இறையே நம்மை வழி நடத்துவார், இறையே நம்மை பாதுகாப்பார், இறையே நம்மை ஆட்கொள்வார்.

சிவம் சுபம்

Vigneswaram Vigna nivaaraNam (Aarabhi)

Aarabi

Vigneswaram
Vigna nivaaraNam
Skantham
Gnana prathaayagam

Saasthaaram
Sath guna dhaayagam
Bairavam
Baya nivaaraNam

NaaraayaNam
Natha Jana paalanam
Sakthim
Sakala kaarya Siddhim
Aanjaneyam
Asaadya saathagam
Sadhaa Sivam
Sarva MangaLam

Sivam Subam

Sanchalam pokkiduvaai (Suruti)



Suruti

Sanchalam pokkiduvaai, en mana sankatam theerthiduvaai

Kaamanaik Kaalanai vendra Maaruthi, Kariyavanai idhayaththuL vaiththa (Aanjaneya)     Murthi...

Raamanaiyae ninainthu,
Raamanaik kandurugi,
Raaman kulam kaaththu
Raaman adi thaangi
Indrum vaazhum Siranjeevi, endrum emakkaruLum samaya Sanjeevi..

Sivam  Subam

மாசியும் பங்குனியும் கூடும் நேரம்



மாசியும் பங்குனியும் கூடும் நேரம், மங்கையற்கரசியை தொழுதிடும் நேரம்.

சாவித்ரி அன்னையாம் முக்கண்ணியை நேமத்துடன் போற்றி நோன்பு சரடணியும் நேரம்.

கார் அரிசியும் காராமணியும் கலந்தடை செய்து படைத்திடுவோம். உருகா வெண்ணையை உள்ளன்புடன் வைத்து அன்னையின் அடிமலர் பணிந்திடுவோம். யமனும் நம் வசம் ஆகிடுவான், சாகா வரத்துடன்  சந்ததியும் அளிப்பான்.

நோயகலும், எதிர்ப்பு விலகும், ராஜ வாழ்வும் தானே சேரும். பதினாறும் பெற்று பெரு வாழ்வுறலாம், பரா சக்தியும் நம் பக்க துணையாவாள்.

சிவம் சுபம்

Hari Hara Bhajan


ஓம்

அரி அரன் தனயா
சரணம் ஐய்யப்பா
ஆனந்த ரூபா
சரணம் ஐய்யப்பா
இருமுடி ப்ரியனே
சரணம் ஐய்யப்பா
ஈடில்லா தேவா
சரணம் ஐய்யப்பா

உயர் நைஷ்டீகா
சரணம் ஐய்யப்பா
ஊழ்வினை அறுப்பாய்
சரணம் ஐய்யப்பா
எழில் மணிகண்டா
சரணம் ஐய்யப்பா
ஏற்றம் அளிப்போய்
சரணம் ஐய்யப்பா

ஐந்து மலை அரசே
சரணம் ஐய்யப்பா
ஒப்பிலா வீரா
சரணம் ஐய்யப்பா
ஓங்கார ஜோதி
சரணம் ஐய்யப்பா
ஔஷத தன்வந்தரீ
சரணம் ஐய்யப்பா

கலியுக வரதா
சரணம் ஐய்யப்பா
கங்கணம் அணிவோய்
சரணம் ஐய்யப்பா
சபரி நிவாஸா
சரணம் ஐய்யப்பா
ஞான ஸ்வரூபா
சரணம் ஐய்யப்பா

த்யான நிலையா
சரணம் ஐய்யப்பா
ந்யாய நேமமே
சரணம் ஐய்யப்பா
பந்தள குமார
சரணம் ஐய்யப்பா

மஹிஷி சம்ஹாரா
 சரணம் ஐய்யப்பா

அய்யப்ப கீதம் (தேசீய கீத மெட்டு) - Bhajan

அய்யப்ப கீதம்   (தேசீய கீத மெட்டு)

சத்ய ஸ்வரூபனே ..... சபரி கிரீச ..... நித்ய ... ப்ரஹ்மசாரி
பந்தள ராஜ குமாரா.....எங்கள் பந்தம் அறுத்திட வா வா
வல்வினை தீர்த்திடும் வீரா ..  .. வா வா.... வன்புலிமேல் அமர்ந்தே வா

மஹிஷி சம்ஹாரனே வா வா..... மணிகண்ட தேவனே வா வா
மங்கலம் பொழியவே வா வா

ஜெய ஜெய சங்கர நாரண சுதனே..... ஜெய ஜெய தர்ம சாஸ்தா. ...
சரணம் சரணம் சரணம்....... அய்யப்ப தேவனே.... சரணம்.

சிவம் சுபம்



கண்டு கண்டு கண்கள் பனிக்குதே, மீண்டும் காண வேண்டி அவை துடிக்குதே

ஹரிஹர தனயனை, சுப்ர சபரிகிரீசனை...

எண்ணி எண்ணி மனம் களிக்குதே, சரணம் கூவி கூவி நா இனிக்குதே, அய்யன் ப்ரசாதம் உண்டு பிணி
அகலுதே, சந்நிதி விட்டகல மனம்  மறுக்குதே, 

சிவம் சுபம்

எல்லாம் ஐய்யப்பன் எனக்கெல்லாம் ஐய்யப்பன் (Maandu)

உ folk (Maandu)

எல்லாம் ஐய்யப்பன் எனக்கெல்லாம் ஐய்யப்பன்-   தன் கண்ணுள் என்னை வைத்துக் காக்கும் தெய்வம் ஐய்யப்பன்

நினைந்தாலே போதும் நிம்மதி தருவான் - பணிந்தாலோ விண்ணையும்  (நம்) வசமாக்குவான்

பந்தளத்தின் செல்லப் பிள்ளை மணிகண்டன்,
பரமேச பத்மநாப சுகுமாரனாம், பூதநாதன் அவனே சதானந்தனாம்,    வேத கீத நாதமய ஜோதி ஸ்வரூபன்.

ஐயனாராய் காட்டு மேட்டில் குடி யிருப்பான், காத்துக் கருப்பை விரட்டி காவல் இருப்பான், சாஸ்தாவாய் காமாக்ஷி தவம் காப்பான்,  ஐய்யப்பனாய் சபரியில் (தவ) சீலர்க் கருள்வான்

ஸ்வாமியே சரணம் சரணமைய்யப்பா
ஸ்வாமியே சரணம் தரணுமைய்யப்பா.

சிவம் சுபம்

அம்மையப்பனை நினைந்துருகிடுவோம்



அம்மையப்பனை நினைந்துருகிடுவோம், அவர் அபி மலர் நிழலில் சுகித்திருப்போம்.

இம்மையில் நாம் கண்ட தெய்வம் அவரே, மறுமையிலாது வாழவைப்பாரே

ஈன்றவளினும் பெரிய தெய்வமுண்டோ, அவளே மீனாக்ஷியின் மறுஉருவமன்றோ,
தந்தை சொல்லே நமக்கு வேதமன்றோ, இதை உணர்ந்தால் நமக்கு எதிலும் எங்கும் ஜெயம் தானே

இராம பிரானே வாழ்ந்து காட்டினார், அரக்கர் கோனையும் வென்று காட்டீனார், புண்டலீகன் கதை நாம் அறிவோமே, பாண்டுரங்கனே இதனை பரிந்துரைப்பானே

சிவம் சுபம்

ஆதாரம் உந்தன் பாதாரவிந்தமே (Chaarukesi)


சாருகேசி 

ஆதாரம் உந்தன் பாதாரவிந்தமே..
அன்னையே உன்னையே அடைந்தேன் அடைக்கலமே....

ஐங்கார....ஹ்ரீம்கார...
ஓம்கார..ரூபிணியே
ஸ்ரிங்கார லலிதா த்ரிபுரசுந்தரியே.....

பத்து...அவதார பரமனும்....நீயே...
பாதி...உமை.பாகனாம்...சிவனும்..நீயே...
பாமரனுக்கும்..அருளும்.பரம...தயாகரியே...
பணிந்தேன்...உன்னை..கனிந்தருள்வாயே...

சிவம் சுபம்