Monday, November 27, 2017

எல்லாம் உனது பதம்



எல்லாம் உனது பதம்
எல்லாம் உனது செயல் எல்லாம் உனதருளே என்றிருந்தால், பொல்லாத மா துயரம்
நீங்கும் மருவும் உனதடிக்கே ஆதரவாய் சொக்கநாதா

-- சொக்கநாத வெண்பா

சோமன் அணி சுந்தரா
சொக்கநாதேஸ்வரா, சொக்கினேன் உன் அழகில் மீனாக்ஷி சுந்தரா

கயிலையை விட்டு   மதுரை வந்தாய்,  கயற் கண்ணி கரம் பிடித்து சிங்காதனம் அமர்நதாய் கடம்பவனத் தினையே கையிலாயமாக்கி மூவுலகும் ஆளும் முத்தமிழ் வேந்தனே

அங்கிங்கெனாதபடி எங்கும் உன் இடது காலை தூக்கி ஆடி அயர்ந்து விட்டு, மதுரையிலே தானே உன் காலெடுத்து ஆடி உள்ளம் பூரித்தாய், உனதடியாரின் உள்ளம் புகுந்தாய்.

கால் பதித்து நடந்து இங்கே  பிட்டுக்கு மண் சுமந்தாய்,  நின் திருப் பாத மண்ணே திருநீறு ஆகும், என்னிரு வினை களைந்து உன் பாதம் சேர்க்கும்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment