Monday, November 27, 2017

மனமெனும் சிம்மாசனத்தில் உனை வைத்தேன் (Simhendramadhyamaam)


Simhendramadhyamaam

(என்) மனமெனும் சிம்மாசனத்தில் உனை வைத்தேன், உன் மனமிரங்கி அருள்வாய் அன்னை லலிதையே,

அகந்தையை சுட்டெரிக்கும் அக்கினிப் பிளம்பே, அருங் கருணை பொழியும் அகிலாண்டேஸ்வரி

ஐந்தொழில் புரியும் சதா சிவையே,  ஐயிரண்டு அவதார நாராயணியே,
ரோஹ நிவாரணி, கால பைரவி, வேத ரூபணி காயத்ரீ

தவம் செய் காமாக்ஷி,
அவம் நீக்கும் விஸாலாக்ஷி, மங்கல  மங்கையர் தொழும் மீன லோசனி, ஸ்ரீ சக்ர வாஸினி, ஸ்ரீ சிவசக்தி

அயக்ரீவ அகத்தியர் பரவும் பராசக்தி, கூத்தனூர் தேவியும் நாச்சியார் அன்னையும் பணியும் மஹா சக்தி,
திருமீயச்சூர் வாழ் திரிபுர ஸுந்தரி,(தக்க) தருணம் இதம்மா உன் தனயனை ஆதரி..

சிவம் சுபம்

No comments:

Post a Comment