Friday, May 29, 2015

அடாணா - தில்லை சிவகாமியம்மைப் பதிகம் (Attana)

அடாணா  - தில்லை சிவகாமியம்மைப்  பதிகம்



(எவ்வாறு அய்யனுக்கு "வேயுறு தோளி பங்கன்" பாடுகிறோமோ
அம்மைக்கு இந்த பாடலைப் பாடி அருள் பெறுவோம்) 

இரவி மதி பூமிசேய புந்தி குரு வெள்ளி
சனி ராகு கேதுக்கள் எல்லாம்
இயங்குவது உன் வலுவினால் ஆதலால்
அன்பரை என்றும் வாதிக்க வாட்டா 
சரவியல் கொளனையர் திசை புத்தி
சித்திர நன்மை தருவாய் பரிணமிக்கும்
தாப சுர பித்த வாதஞ் சிரக்கம்ப
கப சந்நி முதல் நோயெல்லாம் போம் 
பரவுனது பேர் சொல்லி பூதியோடு
குங்குமப் பொட்டணிதல் கண்டாலுமே
பூதப் பிரேத பைசாச ராக்ஷஸ
விஷம் பொல்லா விலங்கும் ஓடும் 
விரவு உன் மேனியாற் பசுமை பாய அரனது
செய்ய மேனியிற் பாதி கொண்டாய்
மேதினி தழைத்திடத் தில்லை
மாகரத்தின் மேவு சிவகாமி உமையே 

No comments:

Post a Comment