Sunday, May 31, 2015

விசாகத் துதித்த வீரனே (Revathi)



ரேவதி

(வைகாசி) விசாகத் துதித்த வீரனே
கார்த்திகேய கருணாகரனே,

(தை) பூசப் புண்ணிய வேலவனே
பந்த பாசமறுக்கும் கந்தனே

சஷ்டியில்  சூர சம்ஹாரனே
சர்வ லோக ரக்ஷகனே
பங்குனி உத்திர மணமகனே
எங்குல தேவனாம் ஷண்முகனே

சிவக் கண்மணியே, சிவ சக்தி வேலனே
ஞால முதல்வனின்  ஞான இளவலே
வேதாச்சார்யன் தோள் அமர்ந்தோனே 
கீதாச்சார்யனின் மருகனே

audiolink




No comments:

Post a Comment