Friday, May 29, 2015

அன்னபூரணி அருட்பா (Raaga Malika)

அன்னபூரணி அருட்பா


ராக மாலிகை (ஆனந்த பைரவி, ரேவதி, ஹம்சானந்தி, சாமா)

தருமை ஆதீனம் பத்தாவது குரு மகா சந்நிதானம்
ஸ்ரீ சிவஞான தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் அருளியது 
கன்னியா  குமாரி யருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பருவத வர்த்தனி,
கமலை பராசத்தி சிவ காம சுந்தரி  காழி உமை பிரம வித்தை 
தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை -
தந்த அகிலாண்ட நாயகி அறம் வளர்த்தவள்
தண்  னருள் செய் காமாக்ஷி யிங்கு 
என்னை யாள்  கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை இலங்கு நீலாயதாக்ஷி எழில்
பிரம ராம்பிகை இலங்கு பார்வதி ஆதி
எண்ணிலா நாம ரூப 
அன்னையாய்க் காசி முதலாகிய தலத்து
 விளையாடிடு விசாலாக்ஷியாம்
ஆண்ட கோடிகள் பணி  அகண்ட பூரணி என்னும்
அன்ன பூரணி அன்னையே 

No comments:

Post a Comment