Wednesday, June 24, 2015

என்ன செய்தாலும் துணை மஹா பெரியவா (Hara Hara Priya)


HARA HARA PRIYA  

என்ன செய்தாலும் துணை மஹா  பெரியவா .... நான் (நாம்)
எங்கு சென்றாலும் துணை மஹா பெரியவா 
அன்னையினும்  அன்புப் பாற் கடல்
அய்யன் அருளில் கயிலை  சிகரம்  
கண் மூடித் தவத் திருக்கோலம், அடியவர்
கண் மூடி{யா}னாலும் காக்கும் அருட் கரம்,
பரமன் {இன்னும்}  தேடும் பரமேசன் பதம், என் போல்
பாமரனையும் காக்கும் பகவத் பாதம்  
காஞ்சி வாழும் காமகோடீஸ்வரர் 
சஞ்சிதமும் போக்கும் ஜகத் குரு தேவர் 
இம்மையில் நம் கண் கண்ட தெய்வம்
மறுமைப் பிணி(யும்) அகற்றும் மஹா பெரிய(வா) தெய்வம்

சிவம் சுபம் 

No comments:

Post a Comment