Sunday, August 19, 2018

அன்னை புகழ் பாடும் ஆடி மாதம் (Thillang)

உ (திலங்)

அன்னை புகழ் பாடும் ஆடி மாதம், தன்னையே தருபவள் ஆடி  வரும் மாதம்

நாடி வந்தோர்க்கு தேடி வந்தருள்வாள், பாடிப் பணிவோரின் உள்ளம் உறைவாள்

பிள்ளைத் தமிழ் அமுது படைத்து அழைப்போம், அபிராமி அந்தாதி அன்புடன் இசைப்போம், வடிவுடை மாணிக்க மாலை சூட்டுவோம்,
அன்னையின் சௌந்தர்ய லஹரியில் லயித்துக் களிபுபோம்..

மா விளக்கேற்றி மதி முகம் காண்போம்,  ஸுவாசினி பூஜை செய்து சுபமெல்லாம் பெறுவோம்,  இன்னிசையுடன் இன்னமுதமும் படைப்போம், இன்னல்கள் இன்றி  ஈறெட்டாய் வாழ்வோம்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment