Tuesday, April 7, 2015

மதுரை எனும் ஒரு சிவ ராஜதானி

(மா) மதுரை எனும் ஒரு சிவ ராஜதானி,  அந்த சிவ ராஜதானியில் ஓர் கௌரி லோகம்

அந்த கௌரீ லோகத்தில் ஓர் பொன்னூஞ்சல், அந்த பொன்னூஞ்ல் ஆடினார், மீனாக்ஷி சௌந்தரர்

ஆடிக்கொண்டே அன்பரின் வேண்டுதல்களை, அய்யனுக்ககு உறைத்தாளே,  அன்னை மீனாள், வேண்டுவோர் வேண்டுமுன் வரமருளும் ஈசன் "ததாஸ்தூ" என்றுரைத்து நிஷ்டை கூடினான்

ஆராரோ ஆராரோ அம்மையப்பரே, அகிலம் உய்ய பள்ளிகொள்ளும் அம்மையப்பரே, மீண்டும் காலை வருவேன் நான் அம்மையப்பரே, நான் வேண்டுவதெல்லாம் பூர்த்தி செய்வீர் அம்மைப்பரே !!

audiolink


அம்மா என்றழைக்க நாவில் (Madhyamavati)

மத்யமாவதி

அம்மா என்றழைக்க நாவில் அமுதூறுதே! அகம் குழையுதே! ஆனந்தம் பெறுகுதே!

இச்செகத்தில்.அன்னைக்கு ஈடிணை உண்டோ? ஈசனுக்கும் கிட்டா பெறும் பேறிதுவன்றோ?

என்ன தவம் செய்தேனோ "தங்கமே" எனை ஈன்றாயே,  என் சொல்வேன் "மதுரமே" எனை பேணி காத்தாயே, கைமாறென்ன செய்வேன் "(சிவ)சுபமே"  உன் கானக் (ஞானக்) கருணைக்கே,  கழலிணை மறவேன் தாயே மதுரை மீனாளே!

audiolink

பக்தி செய்யும் வரம் அருள்வாயே (Bilahari)

பிலஹரி

பக்தி செய்யும் வரம் அருள்வாயே,  பராசக்தி உன்னையே...

நின்றாலும் கிடந்தாலும் என்ன செய்தாலும், நின்னையே நினைந்து நைந்துருகி....

நாவாற உன் புகழ் பாட வேண்டும், கண்ணாற உன் பொலிவை வியந்திட வேண்டும், கரம் குவித்துன்னை தொழுதிட வேண்டும், (என்) சிரம் கொண்டுன் பதம் தாங்கிட வேண்டும்

உன் அன்பர் குழாமில் நிலைத்திட வேண்டும், அமுதவர்க் களித்துன்னை மகிழ்விக்க வேண்டும், உயிருள்ள வரை உன்னை மறவாமை வேண்டும், (என்) உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாமை வேண்டும்

audiolink

படைப்பவள் நம்மை (Vasantha)

வசந்தா

படைப்பவள் நம்மை அங்கயற்கண்ணி, (ஞானப்)
பாலூட்டி வளர்ப்பவள் த்ரிபுரசுந்தரி

பசிப் பிணி தீர்ப்பவள் அன்னபூரணி, நல் வழி காட்டுவாள்                    தர்மசம்வர்த்தினி

ஞானமளிப்பாள் காந்திமதி, தவநெறி கூட்டுவாள் காமாக்ஷி, பொலி-வேற்றிடுவாள் வடிவுடை நாயகி,  (மனை) மங்கலம் காப்பாள் கற்பக நாயகி

உடல் நலம் பேணுவாள் தையல்நாயகி, மனநலம் தருவாள் மனோண்மணி, சந்ததி காப்பாள் கரு-கருகா நாயகி, தன்னையயே தந்திடுவாள் விசாலாக்ஷி

audiolink

த்ரிபுர ஸுந்தரி தாயே! (Suddha Saveri)

சுத்த சாவேரி

த்ரிபுர ஸுந்தரி தாயே! தீனன் எனைக் காப்பதுன் கடமையே

அலைகடல் துரும்பாய் அலையும் என் மனதை ஒரு நிலைக்குள் நிறுத்தியே..,

சபலம், சஞ்சலம் போக்கியே, சன்மார்க்க வழியதை காட்டியே, உன்னருள் அமுதை ஊட்டியே,  எப்போதும் உன் துணை கூட்டியே,

audiolink

ஐயனைக் காண வாருங்கள் (Hamsanadhi)

Hamsanadhi

ஐயனைக் காண வாருங்கள், அழகு மெய்யனைக்.காண வாருங்ள்

உள் உருகி பாடுவோம் வாருங்கள், நல் உறவு சமைப்போம் வாருங்கள்

(மண்டல) நோன்பிருப்போம் வாருங்கள், (மெய்)
நைந்துருகுவோம் வாருங்கள், (ஹரிஹர) பேதம் களைவோம் வாருங்கள், (உயர்) போதம் பெருவோம், வாருங்கள்

இருமுடி தாங்குவோம் வாருங்கள், இணைந்திருப்போம் வாருங்கள், (சபரி) மலை ஏறிச் செல்வோம் வாருங்கள், ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்!

audiolink

Jebamae jeyam, Jebam pokkum bayam (Thillang)

Thilang

Jebamae jeyam, Jebam pokkum bayam - Irai...

Raama Raama Raama endru Raaman naamam solluvom - Raaman naamam solluvom,  Anumanaai uyaruvom- Anumanaai uyaruvom,  endrumae vaazhuvom

KrishNa KrishNa KrishNa endru KaNNan naamam solluvom,  KaNNan naamam solluvom, Raadhaiyaai maaruvom - Raadhaiyaai maaruvom , KaNNanuL iNaivom

Saayi Saayi Saayi endru Saayi naamam paaduvom, Saayi naamam paaduvom, thalai saayaathu vaazhuvom

audiolink