Sunday, June 30, 2019

நமசிவாயம் நமசிவாயம் (Bhajan)

ஓம்

நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்

நமசிவாயம் நல்லருள் பொழியும்
நமசிவாயம் நல்லோரை இணைக்கும்
நமசிவாயம் நல் மனம் உறையும்.
நமசிவாயம் நற்கதி அளிக்கும்

மஹாதேவம் மன பலம் அளிக்கும்
மஹாதேவம் மதிப்பைக் கூட்டும்
மஹாதேவம் மங்கலம் சேர்க்கும்
மஹாதேவம் மழை தருவிக்கும்

சிவாய என்றிட சித்தம் தெளியும்
சிவனைத் துதித்திட ஞானம் ஒளிரும்
சிவனை வலம் வர சந்ததி சிறக்கும்
சிவனைக் கண்டிட சுபம் சுரக்கும்

வாமதேவன் அர்தநாரி
வாமதேவன் அம்மை யப்பன்
வாமதேவனே ஆதி குரு
வாமதேவனே சங்கர நாரணன்

யானைத் தோலை போர்த்திய தேவன்
யாதும் ஆன ஆதி பரா பரன்
யாதும் அவனது செயலாகும்.
யாதும் அவனது அருளாகும்.

பஞ்சாக்ஷரம் ஜெபித்திடுவோம்
பஞ்சம் பசிப் பிணி கடந்திடுவோம்.
பரமேசனைக் கண்டிடுவோம்.
பரமேசனுள் நிலைத்திடுவோம்.

நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்

சிவம் சுபம்

We can chant NAMASIVAAYAM
at the end of each stanza.
Sivam subam

Natarajar Pathhu - 2 Song - Maanada Mazhuvaada



நடராஜர் பத்து - பாடல் 2

(திரு)விருத்தம் - அப்பர் பெருமான்

படைக்கல மாக வுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப் பும் உனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறணிந்து உன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.

நடராஜர் பத்து - பாடல் 2
ப்ருந்தாவன சாரங்கா

மானாட மழுவாட மதியாட புனலாட  - மங்கை சிவகாமி ஆட
மாலாட நூலாட மறையாட திரையாட  - மறை தந்த பிரமனாட
கோனாட வானுலக கூட்டமெல்லாம் ஆட - குஞ்சர முகத்தானாட
குண்டலம் இரண்டாட தண்டை  புலியுடை  ஆட - குழந்தை முருகேசனாட
ஞான சம்பந்தரோடு இந்திரரதி பதினெட்டு - முனி அஷ்ட பாலகரும் ஆட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட - நாட்டிய பெண்களாட
வினையோட உனை பாட  எனை நாடி இதுவேளை  - விருதோடு  ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே
தில்லை வாழ் நடராசனே.... தில்லை வாழ் நடராசனே

சிவம் சுபம்

தமிழ் த்யாகைய்யரின் ப்ரதோஷ அருள் அமுது (Paapanaasa Sivan Sir's song)



தமிழ் த்யாகைய்யரின் ப்ரதோஷ அருள் அமுது

சுருட்டி ராக பாற்கடல் திரட்டு

சிவபெருமான் க்ருபை வேண்டும்! - அவன்
திருவருள் பெற வேண்டும்! வேறென்ன வேண்டும்?!

அவலப் பிறப்பொழிய வேண்டும்! - அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும்! வேறென்ன வேண்டும்?!

தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும்! வேறென்ன வேண்டும்?!

காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
இராமதாசன் உய்ய வேண்டும்! வேறென்ன வேண்டும்?

சிவம் சுபம்

திருநீற்று மருந்து



"திருநீற்று மருந்து"

பசி தீர்க்கும் மருந்து
பிணி நீக்கும் மருந்து
குணமளிக்கும் மருந்து
குலம் காக்கும் மருந்து

அருள் பொழியும் மருந்து
இருள் அகற்றும் மருந்து
சுகமளிக்கும் மருந்து
சுபமளிக்கும் மருந்து

எளிமையான மருந்து
ஏற்றமளிக்கும் மருந்து
பொலிவருளும் மருந்து
கனிவருளும் மருந்து

இறை யணியும் மருந்து
இணையில்லா மருந்து
கனகம் பொழி மருந்து
ககனம் போற்றும் மருந்து

வேதத்திலுள்ள மருந்து,
கதியளிக்கும் மருந்து,
சிவமாக்கும் மருந்து
திருநீற்று மருந்து......

திருஆலவாயனின் மருந்து

சிவம் சுபம்

எத்தனை முருகன் சென்னையிலே (On Murugas diverse forms in Chennai)



ராகம்

எத்தனை முருகன் சென்னையிலே அத்தனையும் அருள் வடிவமம்மா

காபாலி மைந்தன் கருத்தினுள் புகுவான், கந்த கோட்டத்தான்  சொந்தம் ஆவான்
வொற்றியூரான் மகன் வெற்றிகள் குவிப்பான்,
வால்மீகீயூர் வள்ளல் வரமழை பொழிவான்,

வடபழனி ஆண்டவன் வான்மழை பொழிந்தால், குன்றத்தூரான் குடையாய் காப்பான்
வல்லக்கோட்டையன் வலிமை சேர்ப்பான்
போரூர் வீரன் காவல் இருப்பான்

பாம்பனார் வேலன் பகை கடிவான்
சிறுவாபுரீசன் பெருவீடருள்வான்
ஆறுபடையும் இங்கே உண்டு
முத்துக்குமரனை இங்கேயே காணலாம்

இன்னும் எத்தனை குமரன் தலங்கள், அத்தனையும் காண
(இப்) பிறவி போதுமோ
குமரா குமரா என்றே கூவி குமரனை நம்முள்ளே தெரிசித்திடுவோம், குமரன் அருளில் திளைத்திருப்போம்.

சிவம் சுபம்

சரணம் கூவி ஒடி வந்தேன் ஐய்யப்பா (Ayyappa - Punnaga VaraaLi)



 புன்னாக வராளி

சாக்க்ஷாத் விஷ்ணும் ஸ்வயம் மாதா, பிதா யஸ்ய மஹேஸ்வர:
தம் வந்தே ஸர்வ பூதேசம் ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

சரணம் கூவி ஒடி வந்தேன் ஐய்யப்பா - உன்
சரண கமலம் நாடி வந்தேன் மெய்யப்பா

இருமுடி சுமந்து வந்தேன் ஐய்யப்பா,    உன் திருவடியைச் சூட வந்தேன் மெய்யப்பா

காடு மலை கடந்து வந்தேன் ஐய்யப்பா, எனமனக் கசடுகளைப் போக்கிவிடு மெய்யப்பா

பம்பையில் குளித்து வந்தேன் ஐய்யப்பா, என் சிந்தையில் நிறைந்திரு மெய்யப்பா

திருமலையனைத் தாயாய் கொண்ட ஐய்யப்பா,
அண்ணாமலையன் செல்வனே மெய்யப்பா

சபரிமலை ஜோதியே ஐய்யப்பா,  அபரிமிதக் கருணையே மெய்யப்பா

சிவம் சுபம்

அனலில் தோன்றிய அருட் புனலே + கதி என்றடைந்தேன் உனையே



அனலில்  தோன்றிய அருட் புனலே
ஆலவாய் உறை அமுதே
இச்சை க்ரியை ஞானமே
ஈசனை வலம் வைத்த சுந்தரியே
உயர் நான்மாடக் கூடல் வாழ்வே
ஊழி முதல்வியே
எழில் மரகத வடிவே
ஏழு ஸ்வர ஒலியே
ஐந்தொழில் புரி அங்கயற் கண்ணியே
ஒப்பிலா பிள்ளைத் தமிழே
ஓங்கி உலகளந்த நாரணியே
ஔவையும் வள்ளுவனும் கண்ட ஆதியே 

நின்னடிமலர் என் சிரம் வைப்பாயே. 



கதி என்றடைந்தேன் உனையே, சத்
கதி அளித்தென்னை காப்பாயே

என் துணை யென்றும்  நீயே,
தூய தமிழே! அன்னை மீனாளே

(சங்கபதும) நிதியெனக்கென்றும் நீயே
நந்நெறி வழி எனை நடத்திடு வாயே
ஜெகன் மாதா (என்) ஜெகத்குருவே,
ஜெகன் மோஹன சுந்தரியே, 

கிள்ளை மொழி கேட்டருள்பவளே, இப்
பிள்ளை முறை செவி மடுப்பாயே,
உன் திருக்கோயிலே என் ஸ்வர்க்கம்
என் உளமே உன் திருக்கோயில்

சிவம் சுபம்