Sunday, August 19, 2018

ஸ்ரீ குரு பகவான் துதி (Mohanam)

ஓம்

ஸ்ரீ குரு பகவான் துதி

(எழுதியவர்:  வார ஸ்ரீ)

உருவாகும் உலகில் எல்லாம் குரு வாகும் பகவானே
திருவாகும் செல்வம் எல்லாம் தினம் தோறும் தருவோனே

தலம்  ஆலங் குடி தனிலே...தளம் கொண்டு அமர்வோனே
குலம்  தேவர் குலம்  காக்கும் புஷ்பா ராகச் சுடரோனே

பெரும் யானை வாகனம் மேல்...வரும் வ்யாழ பகவானே
அரசாலே அனல் வளர்த்தோம்...அரசாளும் நிலை தருவாய்

பொன்மஞ்சள் மேனியிலே திகழ் மஞ்சள் ஆடையனே
வெண் முல்லை மலரளித்தோம்,   வித்தைகளைத் தந்தருள்வாய்

"ஸ்ரீம்" என்னும் மந்திரத்தால் திருக்கோலம் இட் டழைத்தோம்
பொறி கடலை படைத்   தளித்தோம்....நீ பெயர்கையில் அருள் தருவாய்

சிவம் சுபம்

No comments:

Post a Comment